Friday, May 16, 2008

பலர் இக்கரைக்கு அக்கரை பச்சை எனும் கணக்கில் மதங்கள் மாறுகின்றனர்.மதம் மாறுபவர்கள் வாழ்வடைவதும் இல்லை.

நக்மாவும், மனமாற்றம் குறித்த சிந்தனைகளும்

Bernardo Strozzi 1581 – 1644

நடிகை நக்மா கிறிஸ்தவரானார் என்னும் செய்தி பல தினசரிகளில் முதன்மைப் படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. தனது துயரமான சூழலில் பைபிள் தனக்கு ஆறுதல் அளித்ததாகவும் அதுவே தன்னை கிறிஸ்தவ மதத்துக்குள் நுழைய வைத்தது எனவும் நக்மா தெரிவித்திருக்கிறார்.

பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு சூழல்களில் நிகழும் இத்தகைய மனமாற்றங்கள் முதலில் ஏற்படுத்தும் அலைக்கும், வேர் விடுதலுக்கும் இடையே ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.

பலருடைய மதமாற்றம் வெறும் அடையாளங்களை மாற்றிக் கொள்வதாகவோ, ஏற்றுக் கொள்வதாகவோ இருக்கிறதே தவிர உண்மையான அர்த்தங்களைக் கண்டு கொள்வதாக பல வேளைகளில் இருப்பதில்லை.

எனவே தான் கிறிஸ்தவ மதத்தில் பிறந்து விட்டதாலேயே கிறிஸ்தவர் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட "மீண்டும் பிறத்தல்" எனும் கிறிஸ்தவத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டு இறையில் சரணடைதல் என்பதை நம்புகின்றனர்.

குழந்தையாக இருக்கும் போது அளிக்கப்படும் திருமுழுக்கின் வழியாக கிறிஸ்தவத்தில் நுழைந்தாலும், சுய அறிவு வந்தபின் இயேசுவில் முழுமையாய் சரணடையும் முடிவை எடுப்பதே இந்த இரண்டாவது பிறப்பு.

இத்தகைய இரண்டாம் பிறப்புக்குப் பின் கிறிஸ்தவத்தை விட்டு விலகிச் செல்பவர்கள் மிக மிக மிக அபூர்வம்.

பலர் இக்கரைக்கு அக்கரை பச்சை எனும் கணக்கில் மதங்கள் மாறுகின்றனர். இப்படிப்பட்ட பொருளாதார, அரசியல், செல்வாக்கு, புகழ், பதவி ஆதாயத்துக்காய் மதம் மாறுபவர்களால் எந்த மதமும் வலுவடைவதுமில்லை, மதம் மாறுபவர்கள் வாழ்வடைவதும் இல்லை.

யார் உண்மையாய் மனம் மாறுகிறார்கள் என்பதும், யார் வெறுமனே வேடம் தரிக்கிறார்கள் என்பதும் முழுப் பூசணிக்காய் கணக்காக விரைவில் வெளியே தெரிந்து விடும்.

ஏனெனில் கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் இயேசுவின் போதனை மிக மிகத் தெளிவானது

"நீங்கள் மனம் திரும்பியதை செயல்களில் காட்டுங்கள்" என்பதே அந்த போதனை.

உங்களுடைய பழைய வாழ்க்கைக்கும் புதிய வாழ்க்கைக்கும் இடையேயான வேறுபாடு நீங்கள் மதம் மாறியிருக்கிறீர்களா அல்லது வெறுமனே வேறோர் நிறுத்தத்தில் இறங்கியிருக்கிறீர்களா என்பதைச் சொல்லி விடும்.

உதாரணமாக சுயநல எண்ணங்கள் விலகியிருக்கின்றனவா, பொய் பேசுவதை விட்டு விட்டீர்களா, புகழ், பணம், இச்சை என உலக மாயைகள் விலகியிருக்கின்றனவா, பிறருக்காய் செபிக்கிறீர்களா, உங்களைக் காயப்படுத்துபவர்களை கணநேரத்தில் மன்னிக்கிறீர்களா ? இறையில் ஒன்றித்திருக்கிறீர்களா, படைப்புப் பொருட்களை ஒரு பொருட்டாக எண்ணாமல் படைத்தவரையே பற்றிக் கொள்கிறீர்களா ? இவையெல்லாம் நீங்கள் உண்மையான கிறிஸ்தவராகி இருக்கிறீர்களா என்பதை சோதிக்கும் சிற்சில சோதனைகள்.

உண்மையான மனமாற்றம் என்பது உள்ளுக்குள் உருவாகி ஆளை மாற்றியபின்பே வெளியே தெரியும். போலியான மாற்றம் ஆடைபோல புதிதாய் அணியப்பட்டு கழற்றி வீசப்படும்.

ஏனெனின், மன மாற்றம் என்பது எண்ணிக்கைகளின் இலக்கத்தைக் கூட்டுவதல்ல, தூய ஆவியானவரின் இயக்கத்தைக் காட்டுவதே,

http://jebam.wordpress.com/2008/05/15/nagma_christianity/

நடிகை மதம் மாறினால் என்ன பெரிய விஷயமா?

நடிகை மதம் மாறினால் என்ன பெரிய விஷயமா?
இது ஒரு சாதாரண காரியம் தான்,
தேவன் செய்ய போகும் காரியம் இதைவிட பயங்கரமானது.
கர்த்தருக்கு காத்திருந்து ஜெபிக்க கற்றுகொள்வோம்.

This is just an sample that happened in India,
Jesus is going to do very different, mighty things in the coming days.
Let us wait and pray for INDIA!!
http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=16915#16915
சகோதரி நடிகை நக்மா கிறிஸ்தவளாக மாறியது ஏன்?






ஏசு தான் எனக்கு சூப்பர் ஸ்டார் - நக்மா கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார்




நடிகை நக்மா கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டார். சென்னையில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் அவர் பேசினார். ``தற்கொலை உணர்வில் இருந்து ஏசு என்னை காப்பாற்றினார்'' என்று அவர் கூறினார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழி பட உலகிலும் கதாநாயகியாக கொடிகட்டி பறந்தவர், நக்மா. சினிமாவில், `மார்க்கெட்' இழந்ததும் சில காலம் அரசியலில் இருந்தார். பின்னர் அரசியலை விட்டு ஒதுங்கினார்.

பெங்களூரில் உள்ள `வாழும் கலை' என்ற அமைப்பில் சேர்ந்தார். சில வருடங்கள் அந்த அமைப்புக்காக பணியாற்றினார். பின்னர் அந்த அமைப்பில் இருந்தும் அவர் விலகிவிட்டார்.

இப்போது அவர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டார். ஊர் ஊராக சென்று கிறிஸ்தவ மத கூட்டங்களில் பேச அவர் முடிவு செய்து இருக்கிறார்.

பிரபல கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸ், திரையுலகினருக்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு நக்மா `பைபிள்' பிரசங்கம் செய்து, கூட்டத்தினரை ஆச்சரியப்படுத்தினார்.

ஒவ்வொரு அத்தியாயத்தில் உள்ள வாசகங்களை மேற்கோள் காட்டி பேசி, அனைவரையும் வியக்க வைத்தார். அவர் பேசியதாவது:-

``நான் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் `சூப்பர்ஸ்டார்' நடிகர்களுடன் நடித்து விட்டேன். ஆனால் எனது உண்மையான சூப்பர்ஸ்டார் ஏசுதான்.

அரசியலில் சில காலம் இருந்தேன். அப்போது எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. நிம்மதி இழந்து தவித்தேன். அழுதேன். தற்கொலை உணர்வுகளும் வந்து போனது. அந்த நேரம் `பைபிள்' என் கைக்கு கிடைத்தது. படித்தேன்.

கொஞ்சம் கொஞ்சமாக என்னை அழுத்திய துக்கங்கள் விலகின. மகிழ்ச்சியும், சந்தோஷமும் மனமெங்கும் பரவின.

எனக்கு இப்போது அம்மா, அப்பா, சொந்தபந்தம் எல்லாமே `பைபிள்'தான். நான் கர்த்தரின் மகள். ஏசு, என் வாயில் இருந்து பிரசங்கம் செய்கிறார். தேவன் என்னிடம் சொன்னதை நான் உங்களுக்கு சொல்கிறேன்.

எனக்கு இனி கர்த்தர்தான் உலகம். அவருக்காக ஊழியம் செய்யப்போகிறேன்.''

இவ்வாறு நக்மா பேசினார். தொடர்ந்து அவர், `பைபிள்' வாசகங்களை சொல்லி பிரசங்கம் செய்தார்.

'ஏசுவின் இரண்டாம் வருகை' நிச்சயமாக நடக்கப்போகிறது. அதற்காக நாமெல்லாம் காத்திருக்க வேண்டும்" என்றார் நக்மா.


http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=16827#16827

Friday, May 2, 2008

யோகா - ஒரு கிறிஸ்தவ மருத்துவரின் கண்ணோட்டம் - Dr.பேதுரு

யோகா - ஒரு கிறிஸ்தவ மருத்துவரின் கண்ணோட்டம் - Dr.பேதுரு

யோகா - ஒரு கிறிஸ்தவ மருத்துவரின் கண்ணோட்டம் - Dr.பேதுரு

இன்று மருத்துவர்கள் யோகா செய்யுங்கள் என்று நோயாளிகளிடம் கூறி அதை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். யோகா குறித்து நன்றாக தெரிந்து அவர்கள் கூறுகிறார்களா என்று எனக்கு தெரியாது.என்னைப் பொறுத்தவரையில் நான் எனக்கு தெரிந்ததை கிறிஸ்தவ கண்ணோட்டத்தில் விளக்க விரும்புகிறேன். யோகா என்பது கிறிஸ்தவர்களுக்கு நல்லதா?

முற்காலங்க‌ளிலெல்லாம் மக்களிடையே காலரா, வாந்திபேதி, நிமோனியா, தொற்றுநோய்க‌ள் என கிருமிகளினால் ப‌ர‌வும் வியாதிக‌ள் மிக அதிக அளவில் காணப்பட்டன‌. ஆனால் இந்நாட்க‌ளில் ச‌ர்க்க‌ரை, இர‌த்த‌க் கொதிப்பு, புற்றுநோய், மாரடைப்பு, ம‌ன‌ அழுத்த‌ம் போன்ற‌ வாழ்க்கைமுறை சார்ந்த (Life style diseases) வியாதிகளே அதிகமாகப் பேசப்படுகின்றன‌.


மருத்துவத் துறையின் அசூர வள‌ர்ச்சி மற்றும் தகவல் தொழில் நுட்பங்களின் பெருக்கம் மருத்துவருக்கும் நோயாளிக்குமிடையே உள்ள இடைவெளியை அதிகரிக்கச் செய்கிறது... ம‌ருத்துவ‌ச் செலவினத்தைக் கூட்டுகிற‌து... சில வேளைகளில் செல‌வு செய்ய ப‌ண‌ம் இருந்தும் செலவு செய்துகூடப் புண்ணிய‌மில்லை என மருத்துவத்துறை கைவிரிக்கும் நிலைமையில், எப்படியாயினும் தீர்வு கிடைத்து விடாதா என்ற எதிர்பார்ப்போடு மாற்று மருத்துவ முறைக‌ளில் (Alternative Medicine) நாட்ட‌ம் செலுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.


மருத்துவமனைகளுக்கு வந்துசெல்லும் நோயாளிகளில் மூன்றில் ஒருவருக்கு இருப்பது அவரது மனரீதியான பாதிப்புகளினால் ஏற்படும் உடல்நல கோளாறுகளே. இந்நிலையில் அவர்கள் மருந்து மாத்திரகளை மறந்துவிட்டு மாற்று மருத்துவ முறைகளில் ஊக்குவிக்கப்படுவது ஒன்றும் புதிர‌ல்ல. உலகில் யோகா, ஆழ்நிலை தியானம் போன்ற இருபதுக்கும் மேற்பட்ட மாற்று மருத்துவ முறைகள் உள்ளன. ஒருவித‌த்தில் ஆங்கில மருத்துவத்தின் (Allopathic Medicine) வ‌றைய‌றுக்க‌ப்ப‌ட்ட‌ எல்லையே யோகா போன்ற மாற்றுமுறை மருத்துவத்தின் வள‌ர்ச்சிக்கு காரணம் எனலாம்.

யோகா என்பது என்ன?

சமஸ்கிருத மொழியிலிருந்து வந்த யோகா என்ற வார்த்தைக்கு "இணைப்பு" என்று பொருள். உட‌ல் ஆச‌ன‌ நிலைக‌ள் ம‌ற்றும் மூச்சுப்பயிற்சிக‌ள் மூலம் மனிதனை இறைவனுடன் இணைக்க முற்படும் மனித முயற்சியே யோகா என்றழைக்கப்படுகிறது.

யோகா என்பது அடிப்படையில் ஒரு தனிமனித ஒழுக்கம், வாழ்க்கை முறை, சுய முன்னேற்ற கருவி, உடல் மற்றும் மனநலம் பேணும் ஒரு அறிவியல் சார்ந்த கலை, ஆன்மிக சாதனம் இப்படிப் பலராலும் பலவிதமாக கருதப்படுகிற்து. மன அமையின்மை, மன அழுத்தம், அலைச்சல், வேலைப் பளு, மாசடைந்த உணவு, சுற்றுப்புற சூழல், ஊடகங்களின் தாக்கங்கள் ஆகிய போன்ற சமுதாய சவால்களை எதிர்த்துப் போராடுவதற்கு யோகா ஒரு நல்ல ஆயுதம் என்கின்றனர்.

நம்மில் பலரும் யோகா என்றாலே, தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து வலுவினை ஊட்டும் ஒரு சாதாரணமான உடற்பயிற்சி என்றுதான் நினைக்கிறோம். ஆனால் அது உடற்பயிற்சிக‌ளுக்கெல்லாம் மேலான தத்துவங்களை மையமாகக் கொண்டுள்ளது.

சுமார் கி.மு. 150 வருடங்களில் உருவான பதஞ்சலி யோகசூத்திரத்தின் படி யோகாவில் யமம். நியமம், ஆசனம், பிராணயமம், பிரத்யாகரம், தாரணை, தியானம் ம‌ற்றும் சமாதி என ஆக‌ மொத்தம் எட்டுவகையான வழிமுறைகள் உண்டு. ஆனால் பிந்நாட்களில் 15 ம் நூற்றாண்டில் ஆசனம் (குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருக்கும் உடற்பயிற்சி), பிராணயமம் (சுவாசத்தை உள்ளே வெளியே இழுக்கும் மூச்சுப் பயிற்சி) என்ற இரண்டு அம்சங்களை மட்டும் உள்ளடக்கிய கதா யோகா உருவெடுத்து மற்ற மதத்தினருடன் எதிர்நோக்கும் தத்துவ தர்க்கங்களை சற்றே சாமர்த்தியமாக தவிர்த்து இன்று உலகமுழுவதிலும் பிரபலமாகி வருகிற‌து.

யோகாவின் தத்துவப் பின்னணி:

யோகா வெளிப்படையாகவே கிறிஸ்தவ தத்துவங்களுக்கு எதிரானது. மனிதனை கடவுளோடு இணைக்க முற்படும் முயற்சியே யோகா என்றறிந்தோம். கடவுளைக் குறித்த கருத்தில் இரண்டிற்கும் பெருத்த வேறுபாடு உள்ளது.

முப்பத்து முக்கோடி தெய்வங்களைக் கொண்ட இந்து மதக் கருத்தின் படி காண்ப‌தெல்லாம் கடவுள் தான். இறைவன் ஒரு ஆள்த்தத்துவத்தோடு இல்லாமல் ஒரு ஆன்மீக பொருளாக அண்ட சராசரத்திலுள்ள எல்லாவற்றிலும் வியாபித்துள்ளார் என அது கூறுகிறது. ஆனால் கிறிஸ்தவமோ, இறைவன் என்பவர் மனிதன் உட்பட அண்ட சராசரங்கள் அனைத்தையும் தனது வார்த்தையினால் படைத்த ஆள்த்தத்துவமுள்ள ஒருவரே என தெளிவாய் கூறுகிறது.

ம‌னிதனைக் குறித்த கருத்திலும் இரண்டிற்குமிடையே வேறுபாடு உள்ளது. காண்ப‌தெல்லாம் கடவுள் என்பதால், உடல் ஆசன மற்றும் மூச்சுப் பயிற்சிகள் மூலமாக மனிதனும் இறை நிலையை அடைகிறான் என்பது யோகாவின் கருத்து. இது "நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள்" (ஆதி.3:4) என்று சாத்தான் ஏவாளை வஞ்சித்தது போல் அல்லவா உள்ளது. பரிசுத்த வேதாகமமோ மனிதன் இறைவனால் தனது சொந்த சாயலில் படைக்கப்பட்ட ஒரு படைப்பு; படைப்பும் படைத்தவரும் ஒன்றாகிவிட முடியாது என கூறுகிறது.

மனிதனின் அடிப்படை பிரச்சினையும் அதற்கான தீர்வும் குறித்த விஷயத்தில் மனிதன் தனது இறைநிலையை உணராமல் இருப்பது தான் அவன‌து அனைத்துவகையான பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதும் அத‌னை அவன் த‌னது முய‌ற்சியினால் அடைந்து விட‌லாம் என்பதும் யோகாவின் க‌ருத்து. ப‌ரிசுத்த‌ வேதாக‌ம‌த்தின் படியோ ம‌னித‌னின் பாவ‌நிலைமையே அவன‌து பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம்; இயேசுகிறிஸ்துவின் இரத்தமே சகல பாவங்களையும் நீக்கி, அவ‌னை சுத்திகரிக்கும். இது கிருபையாய் தேவ‌னால் அருள‌ப்ப‌டும் அன்ப‌ளிப்பு; அது முய‌ற்சியினால் ச‌ம்பாதிக்க‌ இய‌லாத‌ ஒன்று.யோகா உண்மை தெய்வத்திற்குப் பதிலாக ஒருவன் தன்னையே மையப்படுத்திக் கொள்ள‌ போதிக்கிற‌து. வாழ்வின் இக்கட்டான வினாக்களுக்கு தீர்வை வேதாகமத்தில் தேடுவதைத் தடுத்து அவன் தனது மனசாட்சியையே நாடும் படி ஊக்குவிக்கிற‌து.

அதிலென்ன தவறு?

அதெல்லாம் சரி, எப்படியாயினும் யோகா ஒருவிதத்தில் நன்மையைத் தானே தருகிறது. பின்னர் அதிலென்ன தவறு; பின்னணியிலுள்ள தத்துவத்தை மட்டும் தவிர்த்து விட்டு வெறும் யோகாசன நிலையையும் உடற்பயிற்சியையும் மட்டும் எடுத்துக் கொள்வதில் தவறு இல்லையே என சிலர் கூறுவது எனது காதினுள் தொனிக்கிறது. அது சரியாக இருக்க வாய்ப்பில்லை.

அனைத்து வகையான யோகாவுமே ஆன்மீகப் பயிற்சிகளே. ஒவ்வொரு யோகாசன நிலையும் இந்து தெய்வங்களை வழிபடுவதாகும். உடல் ஆசன மற்றும் பயிற்சிகளை அவ்ற்றின் ஆன்மீக ஈடுபாடுகளிலிருந்து பிரித்துப் பார்க்க இயலாது. இதுகுறித்து, Hinduism Today என்ற பத்திரிக்கை (April -June 2003) த‌ன‌து க‌ருத்தாக‌ "க‌தா யோகாவை இந்து ம‌தத்திலிருந்து பிரித்துப் பார்ப்ப‌து ஒரு ஏமாற்று வேலையாகும். அநேக‌ யோகா ஆசிரிய‌ர்க‌ள் அத‌ன் வேர் இந்து மத‌த்தில் இருப்பதையும் அத‌ன் ஆன்மீக‌ நோக்கத்தையும் அறியாதிருக்கிறார்கள்" என்று கூறி த‌னது ஆத‌ங்கத்தை வெளிப்ப‌டுத்தியுள்ள‌து.

உண்மை தெய்வத்தின் அருளால் வியாதிகள் அகலும் போது, தீய சக்திகளின் வல்லமையினாலும் வியாதிகள் விலகும் என்பதை ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும். அது ஆச்சரியமல்ல; ஏனெனில், சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே (2 கொரி. 11:14). எனவே வியாதியை நீக்குவதால் ஒருவர் தெய்வமாகி விட முடியாது. ஆனால், நம்முடைய தேவனோ உண்மை தெய்வமாக இருப்பதினால் தான் அவரால் சரீர சுகத்தை மட்டுமல்ல, ஆவி ஆத்துமா சரீரம் முழுவதுமான ஒரு பூரண தெய்வீக சுகத்தை அருளுகிறார். எனவே நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள் (1 யோவான் 4:1).

அது எப்படி அந்த வேலையைச் செய்கிறது என்பது மிகவும் முக்கியம். வேதாகமத்திற்கு முரண்பாடான‌ மந்திர சக்தியினால் அது நடை பெறுகிற‌தா? அப்படியெனில் அது இறுதியில் விடுதலையை அல்ல அடிமைத்தனத்தையே கொண்டு வரும். எனவே எதையும் ஏற்றுக் கொள்ளுமுன் எல்லவற்றையும் சோதிக்கும் மனப்பக்குவம் வேண்டும். அப்போது தான் நலமானதை பிடித்துக் கொள்ளமுடியும். யோகா போன்ற மாற்று மருத்துவ முறைகளில் எது நல்லது எது பொல்லாதது என தெளிவாக எளிதில் வறையறுக்க இயலாத நிலையில் ... "பொல்லாங்காய்த் 'தோன்றுகிற' எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்" என்ற‌ தார‌க‌ மந்திர‌த்தை க‌டைபிடிக்க‌ வேண்டும். விசுவாசத்தினால் வராத யாவும் பாவமே (ரோமர் 14:23). எனவே சந்தேகத்திற்கிடமான செயல்களில் விலகியிருப்பது தான் நல்லது.

கிறிஸ்த‌வ‌ யோகா?

சமீப காலங்களில் உடல் மற்றும் மூச்சுப் பயிற்சியையும் வேதாகம தியானத்தையும் இணைத்து கிறிஸ்தவ யோகா என்று புதிதாக ஒன்று முளைத்திருக்கிறது. கிறிஸ்தவ யோகா என்பது அடிப்படையிலேயே ஒரு வார்த்தை முரண்பாடு. ஒருவனை கிறிஸ்தவ இந்து, இல்லையென்றால் இந்துக் கிறிஸ்தவன் என்று நம்மால் வர்ணிக்க இயலுமா? ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா? (யாக்கோபு 3:11). நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது என்று பரிசுத்த வேதம் தெளிவாய் போதிக்கிறது.(மத். 7:18). எனவே யோகா என்ற மரத்தின் வேர் ஆதாரத்தை எண்ணிப் பார்க்க வேன்டியது மிகவும் அவசியம்.

சுவிசேசத்தை பிரசங்கியுங்கள்... வியாதியுள்ளவர்களை சொஸ்தமாக்குங்கள்... இதுவே பன்னிரு சீடர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளையின் வரிசை(மத். 10:7,8). ச‌ரீர நலனில் காட்டும் அக்கறையைக் காட்டிலும் ஆன்மீக‌ ந‌ல‌னே மிக‌வும் முக்கிய‌ம். ஏனெனில், ச‌ரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது (1 தீமோ 4:8).


வேத‌ம் நமது தியான‌மாக‌ட்டும்; ஜெபம் நமது பயிற்சியாகட்டும்:


வேதாக‌ம‌த்தின் ப‌டி தியான‌ம் என்ப‌து பரிசுத்த வேதத்தில் வெளிப்ப‌டுத்தப்ப‌ட்டுள்ள‌ ச‌த்திய‌ங்க‌ள் எந்த‌ அள‌விற்கு நமக்கு ச‌ம்பந்த‌ப்ப‌ட்ட‌வை என‌ சிந்த‌னை செய்து அவற்றை நமதாக்கிக் கொள்லுத‌லைக் குறிக்கிற‌து. தாவீதின் தியான‌ங்க‌ள் ச‌ங். 119 முழுவதிலும் தெளிவாய் திரும்ப‌த் திரும்ப‌ வெளிப்ப‌டுகின்ற‌ன. வேத வாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிற ப‌டியால் (2 தீமோ. 3:16) அவையாவும் நிச்சயமாக நாம் தியானிக்க‌த் த‌குந்த‌வையே.


வேத‌த்தின் மூல‌ம் தேவ‌ன் ந‌ம்மோடு பேசுகிறார்; ஜெப‌த்தின் மூல‌மாக‌ நாம் அவ‌ரோடு உற‌வாடுகிறோம். இக்கட்டான சூழ்நிலைகளில் கூட‌ தானியேல், தன் மேலறையிலே தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான் என்பதை அறிவோம். நமது பிரச்சினைகளை இறைவனிடம் எடுத்துக் கூறி உரிய தீர்வைப் பெற்றுக் கொள்ள ஜெபமே சிறந்த‌ பயிற்சியாகும்.


"போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் புசியாதிருப்பேன்" என்று தீர்மனித்த பவுலைப் போன்று நாமும் தெளிவுள்ளவர்களாய் மற்ற சக விசுவாசிகளுக்கு எந்த விதத்திலும் இடறலாயிராமல் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுவோம்; வழி நடத்துவோம்.



அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, அவருடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை (ரோமர். 12:1).


Source:உன்னத சிறகுகள்
Author: Dr.Pethuru
http://www.tamilchristians.com/
http://unmaiselvam.blogspot.com/2008/05/dr.html

திருமண அழைப்பு

திருமண அழைப்பு

திருமண அழைப்பு

கிறிஸ்துவுக்குள் பிரியமான இணையதள நண்பர்களே பெயர் அறியப்படாத நண்பர் ஒருவர் இன்னொருவர் சார்பாக நம்மெல்லாருக்கும் ஒரு திருமண அழைப்பு ஒன்றை அனுப்பியுள்ளார்.தயவு செய்து எல்லாரும் எப்படியாவது வந்து திருமணத்தில் பங்கு பெற அன்புடன் அழைக்கிறோம்.அழைப்பிதழ் அனுப்பிய நண்பருக்கு நன்றி.(அவர் விரும்பினால் அவரின் பெயர் வெளியிடப்படும்).தேவனுக்கே மகிமை.


திருமண அழைப்பு

ஆட்டுக்குட்டியானவரின் கல்யாணம் வந்தது. அவருடைய மனையவி தன்னை ஆயத்தம் பண்ணிணாள் (வெளி19.7)

தேவன்புடையீர்!


வானாதி வானங்கள் கொள்ளாத தேவாதி தேவனின் அநாதி தீர்மானத்தின்படி நிகழும் எதிர்பார்த்திராத ஆண்டு, யோசித்திராத மாதம், நினையாத நாளில், மகிழ்ச்சி வேளையில்

**************************************************
தேவ‌னின் திருப்புத‌ல்வ‌ன் இர‌த்த‌த்தால் மீட்க‌ப்ப‌ட்ட‌
திருநிறைச்செல்வ‌ன் திருநிறைச்செல்வி


இயேசுகிறிஸ்து திருச்ச‌பை

**************************************************

ஆகியோருக்கு பிதாவாகிய‌ தேவ‌ன், குமார‌னாகிய‌ தேவ‌ன், ப‌ரிசுத்த‌ ஆவியாகிய‌ தேவ‌னாகிய‌ பெரியோர்க‌ளால் கல்வாரி மலையில் நிச்ச‌ய‌க்க‌ப்ப‌ட்ட‌ப்ப‌டி ம‌த்திய‌ ஆகாய‌த்தில், தூத‌ர்க‌ள் ம‌த்தியில் ப‌ரிசுத்த‌ விவாக‌மும், அத‌ன்பின்ன‌ர் ப‌ர‌லோக‌த்தில் விருந்து உப‌சார‌மும் ந‌டைபெறும். தாங்க‌ள் த‌ங்க‌ள் குடும்பதாருடனும்,சுற்ற‌த்தாருட‌னும், ந‌ண்ப‌ர்க‌ளுட‌னும் கிறிஸ்துவை இத‌யத்தில் ஏற்று, இணையில்லா ச‌மாதான‌ம் பெற்று, ச‌பையாம் ம‌ண‌வாட்டியாக‌ விவாக‌த்திலும், விருந்திலும் க‌ல‌ந்து கொண்டு உச்சித தேவாசிர்வாத‌மும், நித்திய‌ பேரின்ப‌ வாழ்வும் பெற‌ அன்புட‌ன் அழைக்க‌ப்ப‌டுகிறீர்க‌ள்.

அழைக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் பாக்கிய‌வான்க‌ள் வெளி19.9
ஆய‌த்த‌மாகிடுவோர் ஆன‌ந்த‌ம‌டைந்திடுவார்!

இருத‌யக் க‌த‌வைத் த‌ட்டி அ‌ழைக்கும்
தேவ‌ ஆவியான‌வ‌ர்


பின்குறிப்பு: இந்த திருமணத்தில் நீங்கள் பார்வையாளர்களாகவோ அல்லது வாழ்த்துபவர்களாகவோ இல்லாமல் தூதர்களால் வாழ்த்தப்படுபவர்களாக இருக்கவேண்டும் என்பதே என் அவா!

Saturday, April 5, 2008

சகேயுவும்,கற்றுக்கொள்ளும் பாடமும்

கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் ஆணடவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக என் வாழ்த்துதலை தெரியப்ப்டுத்துகிறேன்.

இந்த நாளில் நாம் சகேயுவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சில காரியங்களையும் அதன் மூலம் கர்த்தர் நம்மோடு இடைபடுவதையும் அறிந்து கொள்ளலாம்.

முதலாவது சகேயுவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நான்காக பிரித்து நாம் கற்றுக்கொள்ளுவோம்

1,சகேயு கேள்விப்பட்டான்

2,சகேயு ஆசைப்பட்டான்

3,சகேயு பிரயாசப்பட்டான்

4,சகேயு ஆயத்தப்பட்டான்


இந்த நான்கு தலைப்பின் கீழ் நாம் இன்றைக்கு நம் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கப்போகிறோம்.

1,சகேயு கேள்விப்பட்டான்

முதலாவது சகேயு இயேசுவை குறித்து கேள்விப்பட்டான்.

லுூக்கா: 19:1. அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில்,2. ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன்,3. இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல்

மேலே உள்ள வசனத்தை பார்க்கும் போழுது இயேசுவை பற்றி கேள்விப்பட்டதினாலேயே இந்த சகேயு இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரை பார்க்க வகைதேடினான்.

இன்றைக்கு நாம் நம்முடைய வாழ்க்கையில் இயேசுவை நமக்கு சொல்லக்கூடிய வேதாகம் நம் கையில் இருக்கிறது,இதன் மூலமாகவே இயேசுவைப் பற்றி நாம் கேள்விப்பட முடியும்.வேதத்தின் மகத்துவங்களை பார்க்கும் படிக்கு நம் கணகள் திறக்கப்பட வேண்டும்.இதற்கு நாம் அதிகமாக அதை வாசிக்க வேண்டும்.

நான் இப்படி நினைக்கிறேன் ஏதோ ஒரு கடைவீதியில் இயேசுவைப்பற்றி பேச்சு வந்திருக்கும்.அந்த வழியே போய் கொண்டிருந்த சகேயு நின்று இயேசுவை பற்றி பேசும் வார்த்தைகளை ஆர்வமாக கேட்டிருக்க வாய்ப்புண்டு.ஒரு வேளை அந்த பேசின நபர்களிடம் அவன் தன் சந்தேகங்களை நிவர்த்தி செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்காமல் போய் இருக்கலாம் ஆனால் அவன் இயேசுவை கேள்விப்பட ஆவலுள்ளவனாக இருந்தான் என்பது வேத வசனத்தின் படி அறிந்து கொள்ளலாம்.

சகேயுவை போல நாம் அதிகமாக இயேசுவை கேள்விப்பட பரிசுத்த வேதாகமத்தை அதிகமாக வாசித்து நேசிக்க வேண்டும்.


2,சகேயு ஆசைப்பட்டான்

சகேயு இயேசுவை கேள்விப்பட்டது மட்டும் அல்லாமல் அவரை பார்க்கவும் ஆசைப்பட்டான் என்று வேதம் தெளிவாக நமக்கு சொல்லுகிறது.

லூக்கா19:3. இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான்..........

இதிலிருந்து அவ்ன் இயேசுவை காணும்படி எவ்வளவு ஆசையாகவும்,விருப்பமாகவும் இருந்தான் என்பதை அறியலாம்.

நம்மில் அநேகர் இயேசுவை பற்றி அறிந்து கொள்ளுகிறோம் ஆனால் வரை அண்டிக்கொள்ளவோ ஆசைப்படுவதில்லை.

சங்கிதக்காரன் சொல்லும்பொழுது ஆண்டவருடைய ஆலயத்தின் மேலே அவனுக்குள்ள வாஞ்சையை பற்றி அழகாக சொல்லுகிறான்

சங்கீதம் 84:2 என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வஞ்சையும் தவனமுமாயிருக்கிறது;.................


கர்த்தரின் ஆலையத்தின் மேலேயே இவ்வளவு வாஞ்சை வைத்திருந்த இந்த மனிதர் கர்த்தரின் மேல் வைத்திருந்த ஆசையை அல்லது வாஞ்சையை நாம் கணக்கிட முடியுமா?.

எனக்கு ஒரு பழைய பாடல் வரிகள் ஞாபகம் வருகிறது

இயேசு என் ஆசை சியோன் என் வாஞ்சை

பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்

என்ற இந்த பாடல் எவ்வளவு அர்த்தமுள்ளது.நாம் இயேசுவை நம் ஆவிக்குறிய வாழ்வில் அனுதினமும் காண வாஞ்சிக்கிறோமா,அவரை நோக்கிப்பார்க்க ஆசைப்படுகிறோமா?

3,சகேயு பிரயாசப்பட்டான்

மூன்றாவதாக சகேயு இயேசுவைப்பற்றி கேள்விப்பட்டான்,பின்பு அவரை பார்க்க ஆசைபட்டான் ஆனால் அதில் பல தடைகள் அவனுக்கு இயற்கையாகவே இருந்தது.

லுூக்கா: 19:,2. ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன்,3. இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல்

முதலாவது சகேயுவின் தொழில் ஒரு தடை.மற்ற யூதர்கள் சூழ்ந்து போகின்ற வேளையில் கண்டிப்பாக இந்த சகேயுவை மதித்திருக்க மாட்டார்கள்.ஏன் என்றால் வரி வசூல் செய்யும் ஒரு யூதன் மிகவும் கீழ்த்தரமான வேலை செய்பவனாகவும்,ரோமர்களின் எடுபிடி என்றுமே அந்த மக்கள் முத்திரை குத்தி வைத்திருந்தனர்.அவன் மிகப்பெரிய பாவியாகவே பாவிக்கப்பட்டிருந்தான்.மேலும் சகேயு ஒரு ஊழல் அதிகாரியாகவே இருந்திருக்கவேண்டும் என்பது வேத வசனத்தில் இருந்து அறியலாம்.இப்படிப்பட்டவன் இயேசுவை பார்ப்பதா என்று மக்கள் இவனை இயேசுவின் அருகில் போய்விடாமல் ஜாக்கிரதையாக தடுத்திருப்பார்கள்.

இரண்டாவது மிக முக்கிய காரணம் வேதமே நமக்கு நேரடியாக சொல்லுகிறது.இவன் குள்ளன் என்று.இதிலிருந்ட்து நாம் அறிந்து கொள்ளலாம் இயேசுவை காண முடியாத வகையில் சகேயுவின் நிலை எவ்வளவு பரிதாபமாக இருந்திருக்கும் என்று.

இன்றைக்கும் நம்மில் அனேகர் இயேசுவிடம் நெருங்கி வர முயற்சி செய்வது இல்லை.இதற்கு பல காரணங்களை நாம் ரெடிமேட் ஆக வைத்திருக்கிறோம்.ஆம் பிரியமானவர்களே இயேசுவை நெருங்க முடியாதவாரு பல குறைபாடுகளை பிசாசானவன் நம் வாழ்வில் வைத்திருக்கலாம்.ஆனால் இவகள் நம் நோக்கத்தை ஒரு போதும் கழைத்துப்போட்டு விடக்கூடாது.இதில் நீங்கள் செய்ய வேண்டிய ஒரு காரியம் உண்டு.அது என்ன தெரியுமா? இவகளை விட்டு இயேசுவை பின்தொடரவேண்டும்.சகேயு உலகப்பிரகாரமாக இயேசுவக் காண அவர் வழியாக ஓடினான் என்று வேதம் சொல்லுகிறது



லூக்கா19:4. அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.


அவன் ஆயக்காரர்களுக்கு தலைவனாகவும்,ஐசுவரியவானக இருந்த பொழுதும் தன்னுடைய எந்தவித சுய பரிசேய எண்ணங்களுக்கும் அவன் இடம் கொடாமல் ஒரு சிறுவனை போல தனனை தாழ்த்தி இயேசுவை நெருங்கினான் என்பதை பார்க்கிறோம்.இன்றைக்கு நம்மில் எத்தனை பேருக்கு படிப்போ,வசதியோ,அந்தஸ்தோ,பதவியோ,ஜாதியோ இயேசுவைக் காண தடையாக உள்ளது.இவைகளை தூக்கி எறிந்துவிட்டு இயேசுவை நோக்கி ஓடலாமா?


4,சகேயு ஆயத்தப்பட்டான்

கடைசியாக சகேயுவின் வாழ்வீல் மிகமுக்கிய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.இயேசுவை பற்றி கேள்விப்பட்ட,பார்க்க ஆசைப்பட்ட,அவரை எப்படியும் பார்த்துவிடவேண்டும் என்று பிரயாசப்பட்ட சகேயுவுக்கு ஒரு இனிமையான நிகழ்வு.

லூக்கா19:5இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு, சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.

ஆம் சகேயு எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்தது.அவருடைய மனதின் கதநாயகனாக இருந்த இயேசு அவரை பார்த்து பேசுகிறார்.அவனுடைய வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்லுகிறார்.

சந்தோஷம் அடைந்தான் சகேயு.ஆனால் ஊர்காரர்கள் ஏதோ முனுமுனுக்க அதைவிட அவன் உள் மனது அவனை அரிக்க ஆரம்பித்தது.

இன்றைக்கு இயேசுவை அறிந்து கொள்ள ஆசைபடும் நன்பா உன் மனது என்ன சொல்லுகிறது.அவர் இருதய வீட்டில் வர அது ஆயத்தமாக உள்ளதா?அல்லது ஏழைகளை ஏமாற்றியோ அநியாயமாக சம்பாதித்ததோ அதில் உண்டா?ஆணடவர் முகம் சுளிக்கும் வகையில் நம் இருதய வீடு உண்டா?அதை சுத்தப்படுத்தி இயேசுவை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போவோமா?இதோ இந்த சகேயு அதை செய்ய ஆயத்தமாக இருந்தான்.அவன் உண்மையான வாழ்வின் ஒளி விளக்கை வீட்டில் ஏற்றிவைக்க இதுவரை ஓளி என்று நம்பின விட்டில் பூச்சிகளை வெளியேற்ற ஆரம்பித்தான்.

லூக்கா19:8. சகேயு நின்று, கர்த்தரை நோக்கி, ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்.


ஆம் பிரியமானவர்களே இயேசுவுக்காய் தன் வாழ்வை அர்பணிக்க முழுமையாக இந்த சகேயு துணிந்தான்.நாம் எப்படி என்ற ஒரு கேள்வியை நம் முன் வைத்துக்கொள்ளுவோமா?

முடிவுரை

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே இந்த சகேயுவை போல னம் வாழ்வில் பல நிலைகள் இருக்கலாம்.எல்லா நிலைகளிலும் இந்த சகேயு எடுத்த முயற்ச்கள் எவ்வளவு அழகானவைகள்.எவ்வளவு படிப்பினையை நமக்கு தருகிறவைகள்.

இது போல நம் வாழ்வில் இயேசுவை வேத வசனத்தின் ஊலம் நல்ல முறையில் கேள்விப்பட்டு,அவரை பார்க்க ஆசைப்பட்டு,அதற்காக உண்மையாக எல்லா மேன்மைகளையும் உதறிவிட்டு பிராயாசப்பட்டு, முயற்சி செய்தால் இயேசுவிடம் இருந்து ஒரு வார்த்தை நமக்குண்டு.நான் உன் வீட்டில் தங்க வேண்டும்.இயேசு தங்கும் படி நம் இருதயவீட்டுக்கு வரப்போகிறார்,நம் இருதயம் கேடு உள்ளது,திருக்குள்ளதுமாக உள்ளது என்ற்ரு வேதம் சொல்லுகிறது.நம் இருதய வீட்டில் உள்ள அநியாயங்களை கழைய நாம் ஆயத்தமா?நம் முழு வாழ்வியும் இயேசுவுக்கு கொடுக்க ஆயத்தமா?

அப்ப்படி ஆயத்தமானால் இயேசு மறுபடியும் ஒரு வெகுமதியை உங்களுக்கு அள்க்க விரும்புகிரார்.அது என்ன?

லூக்கா19:9. இயேசு அவனை நோக்கி, இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே.

ஆம தேவமக்களே இயேசு வந்த வீட்டுக்க்கு இரட்சிப்பு,சமாதான,சந்தோஷம் எல்லாம் உண்டு.உங்கள் இருதய வீட்டில் இயேசுவுக்காய் எல்லாம் ஆயத்தமாக இருக்கும் அல்லவா?

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
_________________


http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=13208#13208

Tuesday, April 1, 2008

கடவுள் இருக்கிறாரா?

கடவுள் நம்பிக்கை இல்லாத நண்பர் ஒருவருடன் என் வீட்டில் பேசிக்கொண்டிருக்கும்போது என் வீட்டின் அருகே உள்ள ஒரு பெரிய வீட்டைப்பற்றி ஆச்சரியத்துடன் பேசினார்.

நான் அவரிடம் எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது.ஒரு20 வருடங்களுக்கு முன் இது ஒரு மணல்மேடாக இருந்தது. தினமும் நான் பார்த்துகொண்டு வருகிறேன்.அது சிறிது சிறிதாக மாறி இப்போதெ இருக்கும் அழகான வீடாக மாறிவிட்டது என்றேன்.

நண்பர் கோபத்துடன் என்ன முட்டள்தனமாக பேசுகிறீர்கள்? என்றார்

நான் இல்லை அப்படீத்தான் நட‌ந்தது என்றேன்.

ஒரு மாஸ்டர் பொறியாளர் இல்லாமல் எப்படி இவ்வளவு ‌அழகான வீட்டை உருவாக்க முடியும்? என்றார் நண்பர்.

உலகம் தானாகவே உருவானது,உயிரினங்களும் இயற்கையாகவே உண்டானது என்று நம்பும் உங்களுக்கு கேவலம் ஒரு வீடு தானாகவே உருவானது என்பதை ஏன் நம்ப முடியவில்லை? என்றேன்.

சாதாரண குண்டூசி செய்ய கூட ஒருவர் தேவைப்படுகிறது.அப்படி இருக்கும் போது அண்டசாரங்களையும் ஆச்சரியமாக படைக்கப்பட்ட மனிதனும் இயற்கையாக உண்டானான் என்று புத்தியுள்ள யாரும் கூறமாட்டார்கள் என்றேன்.

நண்பர் பதில் கூறவில்லை.

டார்வின் கூடஇப்படி இருக்கலாம் என்று தான் கூறி யிருக்கிறார். வேதாகமம் மட்டுமே இப்படித்தான் உண்டானது என உறுதியாக எல்லாவற்றையும் கூறியுள்ளது.

டார்வினின் பரிணாமக்கொள்கையை விவாதித்து நேரத்தை வீணடிப்பதை விட ஆண்டவரை மகிமைப்படுத்தலாம் என்பது என்னுடைய தாழ்மையான எண்ணம்


http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=13014#13014

Sunday, March 30, 2008

நித்திய வாழ்வை பெற்றுக்கொண்டாயா?

கேள்வி:
நித்திய வாழ்வை பெற்றுக்கொண்டாயா?



பதில்:
வேதம் நித்திய வாழ்விற்கான பாதையை நமக்கு காட்டுகிறது முதலாவது நாம் தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்தோம் என்று உணர வேண்டும் "எல்லோரும் பாவஞ்செய்து தேவ மகிமையற்றவர்களாகி" (ரோ. 3:23) தேவனுக்கு பிரியமில்லாத காரியங்கள் நாம் செய்து நம்மீது தண்டனையை வருவித்து கொண்டோம். இதுவரை நாம் செய்த பாவங்கள் எல்லாம் நித்திய தேவனுக்கு எதிராகவும், நம்மை நித்திய தண்டனைக்கும் நடத்துகிறது. "பாவத்தின் சம்பளம் மரணம், தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்துவினால் உண்டான நித்திய ஜீவன் (ரோ. 6:23).

என்றாலும் இயேசு கிறிஸ்து பாவமில்லாதவர் (I பேதுரு 2:22) நித்திய தேவகுமாரன் நம்முடைய பாவத்திற்க்காய் அவர் மரித்தார் நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம் மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். (ரோ. 5:8) இயேசு கிறிஸ்து சிலுவையில் நமக்காய் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து பாவத்தின் மேலும் மரணத்தின் மேலும் வெற்றி சிறந்ததை நிரூபித்தார். (யோ. 19:31-42) (II கொரி. 5:21, I கொரி. 15:1-4, I பேதுரு 1:3).

தேவனை விசுவாசித்து நம்முடைய பாவத்தை விட்டு தேவனுடைய இரட்சிப்புக்கு நேராய் திரும்புவோம் (அப். 3:19). எனக்காக கிறிஸ்து சிலுவை மரத்தில் தொங்கினார் என்று விசுவாசித்து, நம்பி அவரிடம் வரும்போது நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நித்திய வாழ்க்கை பரலோகத்தில் தொடங்கலாம். "தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டு போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்ப கூர்ந்தார். (யோ. 3:16) கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் (ரோ. 10:9) விசுவாசம் மாத்திரம் கிறிஸ்துவின் வேலையை சிலுவையில் முடிக்க செய்தது. நாம் நித்திய வாழ்க்கை அடைய வேண்டும் என்றால் நாமும் விசுவாச பாதையில் நம்முடைய ஓட்டத்தை துவக்க வேண்டும் (எபே.2:8-9) கிருபையினால் விசுவாசத்தை கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இரு தேவனுடைய ஈவு.

இயேசு கிறிஸ்த்துவை உங்கள் வாழ்வின் இரட்சகராய் ஏற்றுக்கொள்வீர்களானால் இதோ ஓர் சிறிய ஜெபம் நினைவு கொள்ளுங்கள் இந்த ஜெபமோ அல்லது வேறு ஜெபமோ உங்களை இரட்சிக்காது இது ஆண்டவருக்கு உன் விசுவாசத்தை காட்டுவதும் உன் வாழ்வில் தேவன் தந்த இரட்சிப்புக்கு நன்றி சொல்வதுமே. "தேவனே உமக்கு விரோதமாய் பாவம் செய்து தண்டனை வருவித்துக்கொண்டேன். ஆனால் என்னுடைய பாவத்திற்கான தண்டனையை கிறிஸ்துவின் மூலம் நீர் ஏற்றுக்கொண்டு எனக்கு மன்னிப்பு நல்கினீரே உமக்கு நன்றி. தேவனே, நான் என் பாவத்தைவிட்டு திரும்பி உம்முடைய இரட்சிப்பை நம்பி இருக்கிறேன். உம்முடைய அதிசயமான கிருபைகளுக்கும், மன்னிப்புக்கும் மற்றும் வெகுமதியாய் கொடுத்த நித்திய வாழ்க்கைக்கும் நன்றி தேவனே ஆமென்.

நீங்கள் இப்பக்கத்தை படித்து இருக்கிறீர்கள், இதனால் இயேசுவிற்காக ஒரு முடிவு எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள "நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்" என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

http://unmaiselvam.blogspot.com/2008/03/blog-post_29.html

Thursday, March 27, 2008

இரட்சிப்பு...இலவசம்

பேர்பெற்ற மிஷனரியாகிய ஆதாம் ஸ்மித் சுவிசேஷப்படை முயற்சிக் கூட்டமொன்றில் பிரசங்கம் செய்துமுடித்தபின் "இப்பொழுது அந்நிய நாடுகளில் நடந்தேறும் மிஷனரி ஊழியத்திற்காக காணிக்கை எடுக்கப்படும்" என்றார்.

முன் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு அம்மாள் எழுந்து நின்று,"ஐயா,இரட்சிப்பு இலவசம் என்று இவ்வளவு நேரமும் பிரசங்கம் கேட்டோம்.அப்படியானால் காணிக்கை எதற்காக எடுக்கவேண்டும்?" என்றாள்.

இருவருக்கும் பின்வருமாறு சம்பாஷணை நடந்தது:-

"அம்மா,நீங்கள் தண்ணீர் கிரையம் கொடுத்து வாங்குகிறீர்களா?"

"இல்லை,இலவசம்"

"இலவசமாக தண்ணீர் உங்கள் வீட்டண்டை வர,இரண்டு மைல் தூரத்தில் பம்பில் ஸ்டேஷன் கட்டி யந்திரங்கள் வைத்து,பூமியில் குழாய்கள் பதித்து,தண்ணீரை உங்கள் வீட்டுக்கு முன் கொண்டு வந்து இலவசமாய்க் கொடுக்கிறார்கள்.எவ்வளவு பணம் செலவாகி இருக்கும்."

"ஐயா நான் புத்தியீனமாய்க் கேட்டுவிட்டேன்.தயவு செய்து மன்னியுங்கள்."

இரட்சிப்பு இலவசம் தான்.அதை அறிவிக்க ஆட்கள் வேண்டாமா? கர்த்தருடைய நாம மகிமைக்கென்றுதான் காணிக்கை.

"என் இரட்சிப்புத் தாமதிப்பதில்லை"
-ஏசாயா:46:13

"கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும் படி நாடுகிறேன்"
-ரோமர்:15:21

இரட்சிப்பு...இலவசம்

பேர்பெற்ற மிஷனரியாகிய ஆதாம் ஸ்மித் சுவிசேஷப்படை முயற்சிக் கூட்டமொன்றில் பிரசங்கம் செய்துமுடித்தபின் "இப்பொழுது அந்நிய நாடுகளில் நடந்தேறும் மிஷனரி ஊழியத்திற்காக காணிக்கை எடுக்கப்படும்" என்றார்.

முன் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு அம்மாள் எழுந்து நின்று,"ஐயா,இரட்சிப்பு இலவசம் என்று இவ்வளவு நேரமும் பிரசங்கம் கேட்டோம்.அப்படியானால் காணிக்கை எதற்காக எடுக்கவேண்டும்?" என்றாள்.

இருவருக்கும் பின்வருமாறு சம்பாஷணை நடந்தது:-

"அம்மா,நீங்கள் தண்ணீர் கிரையம் கொடுத்து வாங்குகிறீர்களா?"

"இல்லை,இலவசம்"

"இலவசமாக தண்ணீர் உங்கள் வீட்டண்டை வர,இரண்டு மைல் தூரத்தில் பம்பில் ஸ்டேஷன் கட்டி யந்திரங்கள் வைத்து,பூமியில் குழாய்கள் பதித்து,தண்ணீரை உங்கள் வீட்டுக்கு முன் கொண்டு வந்து இலவசமாய்க் கொடுக்கிறார்கள்.எவ்வளவு பணம் செலவாகி இருக்கும்."

"ஐயா நான் புத்தியீனமாய்க் கேட்டுவிட்டேன்.தயவு செய்து மன்னியுங்கள்."

இரட்சிப்பு இலவசம் தான்.அதை அறிவிக்க ஆட்கள் வேண்டாமா? கர்த்தருடைய நாம மகிமைக்கென்றுதான் காணிக்கை.

"என் இரட்சிப்புத் தாமதிப்பதில்லை"
-ஏசாயா:46:13

"கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும் படி நாடுகிறேன்"
-ரோமர்:15:21

Tuesday, March 25, 2008

எந்த சிறிய காரியமும்

தத்துவ இயல் வகுப்பு நடத்துவதற்காக அத்துறை பேராசிரியர் சில பொருட்களுடன் வகுப்பறையில் நுழைந்தார்.

மாணவர்கள் முன்பாக தனது பாடத்தை நடத்த ஆரம்பிப்பதற்கு முன்பாக அவர் எதுவும் பேசாமல் தனது கையிலிருந்த கண்ணாடி ஜாடியில் சிறிய பந்துகளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு அந்த ஜாடியை நிரப்ப ஆரம்பித்தார். அந்த ஜாடி நிறைய பந்துகளை போட்டபின் மானவர்களைப் பார்த்து, இந்த ஜாடி நிரம்பிவிட்டதா? என்று கேட்டார். மாணவர்கள் எல்லாரும் ஆம் என்றனர்.

அதன்பின்பு ஆசிரியர் சிறு சரளை கற்களை எடுத்து அந்த ஜாடியில் போட்டு அந்த ஜாடியை சற்றே குலுக்கினார். அப்போது அந்த சிறு கற்கல் பந்துகளுக்கிடையே உள்ள இடைவெளியுள்ள இடங்களில் சென்று இடத்தை நிரப்பியது.
அதன்பின்பு அவர் மீண்டுமாக மாணவர்களைப் பார்த்து, இப்போது இந்த ஜாடி நிரம்பிவிட்டதல்லவா? என்று கேட்டார். அப்போது மாணவர்கள் மொத்தமாக ஆம் என்றனர்.

அப்போது அவர் பொடிமணல் உள்ள ஒரு பையை எடுத்து அதை அந்த ஜாடியில் கொட்டினார்.அந்த மணல் எங்கும் இடைவெளியில்லாதவாறு எல்லா இடங்களையும் அடைத்துக் கொண்டு அந்த ஜாடியை நிரப்பியது. என்றாலும் அவர் மீண்டுமாக மாணவர்களைப் பார்த்து இப்போது இந்த ஜாடி நிரம்பி விட்டதா? என்று கேட்டார். எல்லா மாணவர்களும் ஒட்டுமொத்தமாக கோரசாக ஆம் நிரம்பிவிட்டது என்றன.
அப்போது அந்த ஆசிரியர் தனது மேஜையின் கீழே இருந்து இரண்டு கப் காபியை எடுத்து அந்த ஜாடியில் ஊற்றினார். அப்போது அந்த காபியானது மணலுக்கு இடையே உள்ள சிறு துவாரங்களையும் அடைத்து முழுவதுமாக அந்த ஜாடியை நிரப்பிற்று. இதைக் கண்ட எல்லா மாணவர்களும் கொல்லென்று சிரித்தனர். அந்த சிரிப்பொலியின் மத்தியில் பேச ஆரம்பித்த அந்த ஆசிரியர்,இந்த கண்ணாடி ஜாடி உங்கள் வாழ்க்கையை விளக்கும் ஒரு உதாரணமாய் இருக்கிறது என்பதை நீங்கள் கண்டு கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன் என்று கூறி தனது விளக்கத்தை தொடர்ந்தார்.

அந்த சிறு பந்துகள் - கடவுள்,உங்கள் குடும்பம், குழந்தைகள், உங்கள் தேக சுகம், உங்கள் நண்பர்கள் மற்றும் உங்களுக்கு விருப்பமான உணர்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது - மிகவும் முக்கியமானவை ஆகும். இவை மாத்திரம் உங்களிடம் இருக்குமென்றால் நீங்கள் எந்த நிலையிலிருந்தாலும் வாழமுடியும். வாழ்க்கை நிறைவானதாக இருக்கும்.

சிறு சரளைகற்கள் உங்கள் வாழ்க்கையிலுள்ள மற்ற காரியங்களான உங்கள் வேலை, உங்கள் வீடு மற்றும் உங்கள் கார் போன்ற சொத்துகளை குறிக்கிறது.

பொடிமணலானது உங்கள் வாழ்க்கையிலுள்ள லொட்டு லொசுக்கு காரியங்களான சின்ன சின்ன காரியங்களைக் குறிக்கிறது. ஒருவேளை நீங்கள் முதலிலேயே ஜாடியில் இந்த மணலை போட்டிருப்பீர்களெனில், சிறு பந்துகளையும் சரளை கற்களையும் போட இடம் இருந்திருக்காது.

இந்து போலத்தான் உங்கள் வாழ்க்கையும். நீங்கள் உங்கள் வாழ்வில் சின்ன சின்ன காரியங்களுக்கு உங்கள் நேரத்தையும் சக்தியயும் செலவழித்துக் கொண்டிருப்பீர்களெனில், முக்கியமான காரியங்களுக்கு உங்கள் வாழ்வில் இடமில்லாமல் போய்விடும்.ஆகவே உங்கள் மகிழ்ச்சிக்கு தேவையான முக்கியமான காரியங்களில் கவனம் செலுத்துங்கள். கடவுளோடு நேரம் செலவழியுங்கள், குழந்தைகளோடு விளையாடுங்கள். உங்கள் மனைவி அலது குடும்பத்தாரோடு நேரம் செலவழித்து அவர்களோடு வெளியே செல்லுங்கள். உங்கள் வீட்டை சுத்தப்படுத்தி குப்பைகளை அகற்ற எப்போதுமே நேரம் இருக்கட்டும்.

மிக மிக முக்கியமான காரியம் என்னவெனில் பந்துகளால்(அதாவது முக்கியமானவைகளால்) முதலில் நிரப்ப வேண்டும். எதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அப்போது எல்லாம் எளிதாகிவிடும் என்று கூறி தனது விளக்கத்தை முடித்தார்.

அப்போது ஒரு மாணவன் தனது கையை உயர்த்தி, அப்படியானால் காபி எதைக் குறிக்கிறது? என்று கேட்டார். அப்போது புன்னகைத்த அந்த பேராசிரியர் அந்த மாணவரைப் பார்த்து நீ இந்த கேள்வியை கேட்டதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். வாழ்க்கையில் எவ்வளவுதான் அலுவல்கள் நிறைந்திருந்தாலும் உன் நண்பனோடு அமர்ந்து காபி குடிப்பதற்கும் நேரமும் இடமும் இருக்கிறது என்பதைத்தான் காபி குறிக்கிறது என்றார் அந்த பேராசிரியர்.

Monday, March 24, 2008

கிறிஸ்துவத்தில் ஜாதி - பாரதிதாசன்

சமீபத்தில் 'இயேசு மொழிந்த தெள்ளமுது' என்ற பெயரில் பாரதிதாசன் எழுதிய கவிதை ஒன்றை படிக்க நேர்ந்தது. படித்து முடித்தவுடன் என் நேற்றி பொட்டில் யாரோ அடித்தது போல் இருந்தது. அந்த கவிதையில் -ஜாதி - என்பது கிறிஸ்துவத்தை எவ்வாறு ஆட்டிப்படைக்கிறது என்று அழகாக கூறி இருந்தார்.  அவற்றில் சில வரிகள் என்னை மிகவும் பாதித்து. அவற்றை உங்களுடன் பகிர்து கொள்ளகிறேன். 

மேதினிக்கு சேசுநாதர் எதற்கடி தோழி? - முன்பு
வெம்மைகொள் மக்களைச் செம்மை புரிந்திடத் தோழா- அந்தப்
பாதையில் நின்று பயனடைந்தார் எவர் தோழி? - இந்த
பாரத நாட்டினர் நீங்கிய மற்றவர் தோழா - இவர்
ஏதுக்கு நன்மைகள் ஏற்றவில்லை உரை தோழி - இங்கு
ஏசுவின் கட்டளை நாசம் புரிந்தனர் தோழா...

ஏசு மதத்தினில் இந்துக்கள் ஏனடி தோழி? - அந்த
இந்துக்கள் தீயிட்ட செந்துக்கள் ஆயினர் தோழா - மிக
மோசம் அவர்க்கென்ன வந்தது கூறடி தோழி - அட
முன் - மனு என்பவன் சொன்னதில் வந்தது தோழா - அவன்
நாசம் விளைக்க நவின்றது யாதடி தோழி? - சட்டம்
நால்வருணத்தினில் நாலாயிரம் சாதி தோழா - ஏசின்
ஆசை மதம் புகப் பேதம் அகன்றதோ? தோழி
- அந்தத்
தொண்டர்கள் உள்ளனர், தொண்டு பறந்தது தோழா - அதைப்
போதாக்குறைக்கு முப்போகம் விளைத்தனர் தோழா - அடி
எல்லையில் பேதம் இழைத்தது தான் எவர் தோழி? - அட
இந்த நெடுஞ்சட்டை அந்தகரே அறி தோழா...


 


பஞ்சமர் பார்ப்பனர் என்பதெல்லாம் என்ன தோழி? - இவை
பாரத நாட்டுப் பழிச்சின்னத்தின் பெயர் தோழா
- இங்கு
கொஞ்சமும் இப்பழி கொள்ளுதல் நல்லதோ? தோழி - ஒப்புக்
கொள்ளும் நிலத்தினில் கள்ளி முளைத்திடும் தோழா - இங்கு
நெஞ்சினிற் சேசுவின் தொண்டர் நினைப்பென்ன தோழி? - தினம்
நேர்மையில் கோயில் வியாபாரம் செய்து தோழி - அந்தக்
கோல நற் சேசு குறித்தது தானென்ன தோழா? - ஆஹா
கோயிலென்றால் அன்பு தோய்மனம் என்றனர் தோழா - அந்த
ஆண்டவன் தொண்டர்கள் ஆகிடத் தக்கவர் யாவர் - எனில்
அன்னியர், தான் என்ற பேதமில்லாதவர் தோழா!


 

- பாரதிதாசன்
கிறிஸ்துவத்தில் ஜாதி


சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பு எழுதிய கவிதை நமக்கு இன்றும் பொருந்தும்.  நான் என் ஜாதியில் திருமணம் செய்யவில்லை அல்லது நான் என் திருமணத்தின் போது ஜாதி பார்க்கவில்லை என்பதால் இதை எழுதுவதற்கு முழுதகுதி எனக்கு உண்டு. விரைவில் முழு கவிதையும் தர முயலுகின்றேன்.

ஒருவர் மட்டும்!

மூவரும் விசாரணைக் கைதிகள்!
மனித இனத்திற்கு எதிரான குற்றம்.
இருவர் குற்றவாளிகள்; ஒருவர் நிரபராதி.



 

மூவருக்கும் அரசு விசாரணை!
இருவருக்கு நியாயமான விசாரணை;
ஒருவருக்கு அநியாய‌மான விசாரணை.
 

மூவரும் சிலுவை சும‌ந்த‌ன‌ர்!
இருவ‌ருக்கு அவ‌ர்க‌ளே வ‌ருவித்த‌து.
ஒருவ‌ருக்கு சும‌த்த‌ப் ப‌ட்ட‌து.
 

மூவ‌ருக்கும் இக‌ழ்த‌லும் உமிழ்த‌லும்!
இருவ‌ர் ச‌பித்த‌ன‌ர்;திருப்பி உமிழ்ந்த‌ன‌ர்.
ஒருவ‌ர் ம‌வுன‌மானார்.
 

மூவ‌ரும் சிலுவையில் அறைய‌ப் ப‌ட்ட‌ன‌ர்!
இருவ‌ருக்கு வேண்டிய‌துதான்.
ஒருவ‌ருக்கு வேண்டாத‌து.
 

மூவ‌ருக்கும் வேதனை! கைவிட‌ப்ப‌ட‌த‌ற்காக‌
இருவருக்கு காரணமிருந்தது;
ஒருவ‌ருக்கு கார‌ண‌மேயில்லை.
 

மூவ‌ரும் பேசின‌ர், சிலுவையில் தொங்கிய‌போது!
இருவ‌ர் ஏனென்ற‌ன‌ர்;
ஒருவ‌ர் ம‌ன்னித்தார்.
 

மூவ‌ரும் உண‌ர்ந்த‌ன‌ர், சாகிறோமென்று!
இருவ‌ர் எதிர்த்த‌ன‌ர்;
ஒருவ‌ர் ஏற்றுக் கொண்டார்.
 

ஒருவ‌ர்
இருவ‌ர்
மூவ‌ர்க்கும் சிலுவையில் ம‌ர‌ண‌ம்.

மூன்று நாட்க‌ள் போயின‌.
இருவ‌ர் க‌ல்ல‌றையிலே புதைந்த‌ன‌ர்.
ஒருவ‌ர் க‌ல்ல‌றையிலிருந்தும் எழுந்தார்!!
 

எழுத்தாக்க‌ம்: ஆன்டோனிட்டோ
 

ஈஸ்டர் சொல்லும் செய்தி என்ன?

     நான் மிகவும் கொண்டாட விரும்புகிற ஒரு காரியம், ஆதிச் சபை அதிகமாய் பிரசங்கித்த ஒரு காரியம் திருச்சபை வரலாற்றில் ஆரம்ப அத்தியாயத்திற்கான அஸ்திபாரம் என்று உயிர்த்தெழுதலைக் குறித்து சொல்லிக் கொண்டே போகலாம். உயிர்த்தெழுதலின் செய்தி என்ன? அது வெறும் கொண்டாட்டமா? அல்லது வெறும் வரலாற்று நிகழ்ச்சிதானா? அல்லது கட்டுக் கதையா? நாம் இதிலிருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய செய்தி என்ன?


ஆண்டவராகிய இயேசு ஒரு மனிதனாக மனுக்குலத்தில் இரட்சிப்புக்காக இந்த உலகில் வந்தார். மீட்பின் திட்டத்தை நிறைவேற்ற அவர் கல்வாரி சிலுவையில் மரித்தார். மேலும் பல தீர்க்கதரிசனங்களின் படியே தாம் சொன்னபடியே அவர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். கல்லறை காவல் பண்ணப்பட்டிருந்தாலும் அவர் உயிர்த்தெழும் போது எதுவும் அந்த நிகழ்வை தடை செய்ய முடிய வில்லை. தேவனே அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார். உயிர்த்தெழுந்த இயேசு தம் சீடர்களுக்கு காட்சியளித்து நாற்பது நாளள்வும் அவர்களுடன் இருந்து பல காரியங்களை போதித்தார். பின்பு பிதாவின் வாக்குதத்தமாகிய பரிசுத்த ஆவியை பெற்ற 120 சீடர்கள் அதன்பின்பு செய்த ஒவ்வொரு பிரசங்கத்திலும் அவர்களின் ஒவ்வொரு பகுதியிலும் உயிர்த்தெழுதல் ஆக்ரமித்திருந்தது. அது அவர்களின் பேச்சாக மட்டுமலாது உயிர் மூச்சாகவே இருந்தது. தைரியமாக எவர் முன்பாகவும் அவர்கள் ஆண்டவரின் உயிர்த்தெழுதலைக் குறித்து சாட்சியிட்டனர். இதை நாம் அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் வாசிக்கலாம். மேலும் அதுவரைக்கும் ஆறாம் நாளாகிய சனிக்கிழமையன்று ஓய்வு நாளாக ஆசரித்து வந்த அக்கூட்டம் கிறிஸ்த்வர்கள் ஆண்டவர் உயிர்த்தெழுந்த தினத்தை முக்கியப்படுத்து ஞாயிற்று கிழமையை பரிசுத்தமான நாளாக்கி கர்த்தரின் சந்நிதியில் கூடினர். இன்று கிட்ட தட்ட உலகமெங்கிலும் ஞாயிற்று கிழமை ஹாலி டே(holiday) ஆகவும் கிறிஸ்தவர்களுக்கு ஹோலி டே(holy day) ஆகவும் இருக்கிறது.தேவனுக்கே மகிமை.

ஈஸ்டர் வரலாறு
ஈஸ்டர் என்ற பதம் இஸ்டார் என்ற இனப்பெருக்கத்திற்கான தேவதையின் பெயரிலிருந்து வந்தது என்பது சற்று ஆச்சரியத்தை நமக்கு தரக் கூடும். நீங்கள் ஈஸ்டர் முட்டை குறித்த விளம்பரங்கள் மற்றும் செய்திகளை பார்த்திருக்கிறீர்களா?. இதற்குக் காரணம் இதுவே. இந்த இஸ்டார் தேவதைக்காக வசந்த கால முடிவில் இன்றைய ஐரோப்பாவில் முற்காலத்தில் ஒரு பண்டிகை கொண்டாடப்பட்டது. நாம் ஈஸ்டர் அனுசரிக்கும் காலமும் ஐரோப்பிய வசந்த காலத்தின் முடிவிலேதான் வருகிறது.

ஆதி அப்போஸ்தலர்களுக்கு சுவிஷேசத்தை சொல்வதற்கே நேரம் போதாமலிருந்தது. அவர்கள் மற்ற காரியங்களில் சிக்கிக் கொள்ள விரும்ப வில்லை(அப்.6:4). மேலும் அவர்கள் நாற்பது நாட்கள் உபவாச நாட்களாகவும் ஆசரிக்க வில்லை. இவையெல்லாம் பின் நாட்களில் தான் சபையால் ஆசரிக்கப்பட்டன. என்றாலும் ஆதி திருச்சபை ஆண்டவர் உயிர்த்தெழுந்த தினத்திற்கு முன்பாக மூன்று நாட்களும் முழு உபவாசமிருந்து வந்தனர் என்பதற்கான செய்திகள் வரலாற்றில் நமக்கு கிடைக்கிறது.

உயிர்த்தெழுதலால் என்ன பயன்?
உயிர்த்தெழுதல் என்பது ஒரு மத நம்பிக்கையாக அல்லாமல் அது வரலாற்று நிகழ்ச்சி என்பது சந்தேகமற விளங்குவதால் கிறிஸ்தவ விசுவாசமானது கண்ணுக்கு தெரியாத கட்டுக் கதையின் மீதல்ல, எல்லாரும் நன்கறிந்த ஒரு வரலாற்று நிகழ்ச்சியின் மீதே அமைந்துள்ளது என்று நாம் காலரை தூக்கி சொல்லிக் கொள்கிற சம்ப்வமாக இருக்கிறது. இயேசு உயிர்த்தெழுந்ததை எவரும் அந்த காலத்தில் மட்டுமல்ல எந்த காலத்திலும் மறுத்து கூற முடிய வில்லை. மறுத்துக் கூற முடியாது. எருசலேமில் இன்றும் இருக்கிற கல்லறை அவ்வாறு கேட்பவர்களுக்கு பதில் கூறுகிறது. கிறிஸ்தவனின் வாழ்க்கையில் உயிர்த்தெழுதல் ஆண்டவரின் உயிர்த்தெழுதல் நமக்கு விசுவாசத்தை தருகிறதாக இருக்கிறது. கிறிஸ்து உயிர்த்தெழா விட்டால் உங்கள் விசுவாசம் வீண் என்று பவுல் சொல்லுகிறார். உயிர்த்தெழுதல் என்பது கிறிஸ்துவின் அனுபவம் மட்டுமல்ல. ஒவ்வொரு கிறிஸ்த்வனின் அனுபவமும் கூட. நான் மரித்தோரின் உயிர்த்தெழுதலைக் குறித்து இங்கு கூற வில்லை. நாம் ஞானஸ்னானம் பெறுகிற போது நடை பெறுகிற காரியத்தைக் கூறுகிறேன். நாம் தண்ணீறில் மூழ்கும் போது அவரின் மரணத்திற்கு உள்ளானவர்களாகி நாம் எழுந்திருக்கும் போது அவரின் உயிர்த்தெழுதலின் சாயலாக் எழுன்கிறோம். நாம் பாவங்களுக்கு மரித்து நீதிக்கு பிழைக்கிறோம். நம்முடைய பழைய மனிதனை சாகடித்து கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய மனிதனாக் மாறுகிறோம். ஞானஸ்னானத்தின் சத்தியம் மிகவும் பிரமாண்டமானதாகும். நீங்கள் இன்னமும் குழந்த ஞானஸ்னானத்தையே விசுவாசித்துக் கொண்டிருக்கிறீர்களா. அது சரியான அனுபவம் என்று இல்லையென்று நானல்ல வேதம் கூறுகிறது விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெறுகிறவன் இரட்சிக்கப்படுவான். சரி விசயத்துக்கு வருவோம். நீங்கள் உங்கலின் வாழ்க்கையில் உயிர்த்தெழுதலின் அனுபவத்தை பெற்றிருக்கிறீர்களா?

அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு கூறுகிறார்:
இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்.அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன். நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றிலும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன். சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி,கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.(பிலி.3:10- 15)

நீங்கள் தேறின சிந்தை உள்ளவர்களாக இருக்கிறீர்களா?

இன்று நம்மை நாமே நிதானித்து பர்ப்போம். நீங்கள் பவுல் அப்போஸ்தலனைப் போல கிறிஸ்துவுக்காக காரியங்களை விட்டி விட தயாராக இருக்கிறீர்களா? தைரியமுள்ளவர்களாக இருக்கிறீர்களா? ஒரு வேளை உங்கள் குடும்பம் அல்லது சபை பாரம்பரியம் (பெந்தேகோஸ்தே சபையிலும் கூட இது உண்டு), அலது உங்கள் பழக்க வழக்கங்கள் அல்லது நீங்கள் மிகவும் நேசிக்கிற காரியங்கள் இவற்றில் ஏதெனும் நீங்கள் கிறிஸ்துவுக்காக விட வேண்டியிருக்கிறதா? இவை உங்களின் பரம அழைப்பின் பந்தய பொருளுக்கு தடையாக இருப்பதாக நீங்கள் உணர்கிறீர்களா? உங்களின் பரம அழைப்பை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? கிறிஸ்துவை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? னாம் ஆண்டவரின் உயிர்த்தெழுதலின் வல்லமையை அறிந்து கொள்ள அவர்தாமே நமக்கு அருள் செய்வாராக. ஆமென்.


இயேசுகிறிஸ்துவைக்குறித்துத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப் பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர், மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.