Monday, March 24, 2008

கிறிஸ்துவத்தில் ஜாதி - பாரதிதாசன்

சமீபத்தில் 'இயேசு மொழிந்த தெள்ளமுது' என்ற பெயரில் பாரதிதாசன் எழுதிய கவிதை ஒன்றை படிக்க நேர்ந்தது. படித்து முடித்தவுடன் என் நேற்றி பொட்டில் யாரோ அடித்தது போல் இருந்தது. அந்த கவிதையில் -ஜாதி - என்பது கிறிஸ்துவத்தை எவ்வாறு ஆட்டிப்படைக்கிறது என்று அழகாக கூறி இருந்தார்.  அவற்றில் சில வரிகள் என்னை மிகவும் பாதித்து. அவற்றை உங்களுடன் பகிர்து கொள்ளகிறேன். 

மேதினிக்கு சேசுநாதர் எதற்கடி தோழி? - முன்பு
வெம்மைகொள் மக்களைச் செம்மை புரிந்திடத் தோழா- அந்தப்
பாதையில் நின்று பயனடைந்தார் எவர் தோழி? - இந்த
பாரத நாட்டினர் நீங்கிய மற்றவர் தோழா - இவர்
ஏதுக்கு நன்மைகள் ஏற்றவில்லை உரை தோழி - இங்கு
ஏசுவின் கட்டளை நாசம் புரிந்தனர் தோழா...

ஏசு மதத்தினில் இந்துக்கள் ஏனடி தோழி? - அந்த
இந்துக்கள் தீயிட்ட செந்துக்கள் ஆயினர் தோழா - மிக
மோசம் அவர்க்கென்ன வந்தது கூறடி தோழி - அட
முன் - மனு என்பவன் சொன்னதில் வந்தது தோழா - அவன்
நாசம் விளைக்க நவின்றது யாதடி தோழி? - சட்டம்
நால்வருணத்தினில் நாலாயிரம் சாதி தோழா - ஏசின்
ஆசை மதம் புகப் பேதம் அகன்றதோ? தோழி
- அந்தத்
தொண்டர்கள் உள்ளனர், தொண்டு பறந்தது தோழா - அதைப்
போதாக்குறைக்கு முப்போகம் விளைத்தனர் தோழா - அடி
எல்லையில் பேதம் இழைத்தது தான் எவர் தோழி? - அட
இந்த நெடுஞ்சட்டை அந்தகரே அறி தோழா...


 


பஞ்சமர் பார்ப்பனர் என்பதெல்லாம் என்ன தோழி? - இவை
பாரத நாட்டுப் பழிச்சின்னத்தின் பெயர் தோழா
- இங்கு
கொஞ்சமும் இப்பழி கொள்ளுதல் நல்லதோ? தோழி - ஒப்புக்
கொள்ளும் நிலத்தினில் கள்ளி முளைத்திடும் தோழா - இங்கு
நெஞ்சினிற் சேசுவின் தொண்டர் நினைப்பென்ன தோழி? - தினம்
நேர்மையில் கோயில் வியாபாரம் செய்து தோழி - அந்தக்
கோல நற் சேசு குறித்தது தானென்ன தோழா? - ஆஹா
கோயிலென்றால் அன்பு தோய்மனம் என்றனர் தோழா - அந்த
ஆண்டவன் தொண்டர்கள் ஆகிடத் தக்கவர் யாவர் - எனில்
அன்னியர், தான் என்ற பேதமில்லாதவர் தோழா!


 

- பாரதிதாசன்
கிறிஸ்துவத்தில் ஜாதி


சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பு எழுதிய கவிதை நமக்கு இன்றும் பொருந்தும்.  நான் என் ஜாதியில் திருமணம் செய்யவில்லை அல்லது நான் என் திருமணத்தின் போது ஜாதி பார்க்கவில்லை என்பதால் இதை எழுதுவதற்கு முழுதகுதி எனக்கு உண்டு. விரைவில் முழு கவிதையும் தர முயலுகின்றேன்.

0 comments: