கடவுள் நம்பிக்கை இல்லாத நண்பர் ஒருவருடன் என் வீட்டில் பேசிக்கொண்டிருக்கும்போது என் வீட்டின் அருகே உள்ள ஒரு பெரிய வீட்டைப்பற்றி ஆச்சரியத்துடன் பேசினார்.
நான் அவரிடம் எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது.ஒரு20 வருடங்களுக்கு முன் இது ஒரு மணல்மேடாக இருந்தது. தினமும் நான் பார்த்துகொண்டு வருகிறேன்.அது சிறிது சிறிதாக மாறி இப்போதெ இருக்கும் அழகான வீடாக மாறிவிட்டது என்றேன்.
நண்பர் கோபத்துடன் என்ன முட்டள்தனமாக பேசுகிறீர்கள்? என்றார்
நான் இல்லை அப்படீத்தான் நடந்தது என்றேன்.
ஒரு மாஸ்டர் பொறியாளர் இல்லாமல் எப்படி இவ்வளவு அழகான வீட்டை உருவாக்க முடியும்? என்றார் நண்பர்.
உலகம் தானாகவே உருவானது,உயிரினங்களும் இயற்கையாகவே உண்டானது என்று நம்பும் உங்களுக்கு கேவலம் ஒரு வீடு தானாகவே உருவானது என்பதை ஏன் நம்ப முடியவில்லை? என்றேன்.
சாதாரண குண்டூசி செய்ய கூட ஒருவர் தேவைப்படுகிறது.அப்படி இருக்கும் போது அண்டசாரங்களையும் ஆச்சரியமாக படைக்கப்பட்ட மனிதனும் இயற்கையாக உண்டானான் என்று புத்தியுள்ள யாரும் கூறமாட்டார்கள் என்றேன்.
நண்பர் பதில் கூறவில்லை.
டார்வின் கூடஇப்படி இருக்கலாம் என்று தான் கூறி யிருக்கிறார். வேதாகமம் மட்டுமே இப்படித்தான் உண்டானது என உறுதியாக எல்லாவற்றையும் கூறியுள்ளது.
டார்வினின் பரிணாமக்கொள்கையை விவாதித்து நேரத்தை வீணடிப்பதை விட ஆண்டவரை மகிமைப்படுத்தலாம் என்பது என்னுடைய தாழ்மையான எண்ணம்
http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=13014#13014
Tuesday, April 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment