Monday, March 24, 2008

ஒருவர் மட்டும்!

மூவரும் விசாரணைக் கைதிகள்!
மனித இனத்திற்கு எதிரான குற்றம்.
இருவர் குற்றவாளிகள்; ஒருவர் நிரபராதி.



 

மூவருக்கும் அரசு விசாரணை!
இருவருக்கு நியாயமான விசாரணை;
ஒருவருக்கு அநியாய‌மான விசாரணை.
 

மூவரும் சிலுவை சும‌ந்த‌ன‌ர்!
இருவ‌ருக்கு அவ‌ர்க‌ளே வ‌ருவித்த‌து.
ஒருவ‌ருக்கு சும‌த்த‌ப் ப‌ட்ட‌து.
 

மூவ‌ருக்கும் இக‌ழ்த‌லும் உமிழ்த‌லும்!
இருவ‌ர் ச‌பித்த‌ன‌ர்;திருப்பி உமிழ்ந்த‌ன‌ர்.
ஒருவ‌ர் ம‌வுன‌மானார்.
 

மூவ‌ரும் சிலுவையில் அறைய‌ப் ப‌ட்ட‌ன‌ர்!
இருவ‌ருக்கு வேண்டிய‌துதான்.
ஒருவ‌ருக்கு வேண்டாத‌து.
 

மூவ‌ருக்கும் வேதனை! கைவிட‌ப்ப‌ட‌த‌ற்காக‌
இருவருக்கு காரணமிருந்தது;
ஒருவ‌ருக்கு கார‌ண‌மேயில்லை.
 

மூவ‌ரும் பேசின‌ர், சிலுவையில் தொங்கிய‌போது!
இருவ‌ர் ஏனென்ற‌ன‌ர்;
ஒருவ‌ர் ம‌ன்னித்தார்.
 

மூவ‌ரும் உண‌ர்ந்த‌ன‌ர், சாகிறோமென்று!
இருவ‌ர் எதிர்த்த‌ன‌ர்;
ஒருவ‌ர் ஏற்றுக் கொண்டார்.
 

ஒருவ‌ர்
இருவ‌ர்
மூவ‌ர்க்கும் சிலுவையில் ம‌ர‌ண‌ம்.

மூன்று நாட்க‌ள் போயின‌.
இருவ‌ர் க‌ல்ல‌றையிலே புதைந்த‌ன‌ர்.
ஒருவ‌ர் க‌ல்ல‌றையிலிருந்தும் எழுந்தார்!!
 

எழுத்தாக்க‌ம்: ஆன்டோனிட்டோ
 

0 comments: