Sunday, March 30, 2008

நித்திய வாழ்வை பெற்றுக்கொண்டாயா?

கேள்வி:
நித்திய வாழ்வை பெற்றுக்கொண்டாயா?



பதில்:
வேதம் நித்திய வாழ்விற்கான பாதையை நமக்கு காட்டுகிறது முதலாவது நாம் தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்தோம் என்று உணர வேண்டும் "எல்லோரும் பாவஞ்செய்து தேவ மகிமையற்றவர்களாகி" (ரோ. 3:23) தேவனுக்கு பிரியமில்லாத காரியங்கள் நாம் செய்து நம்மீது தண்டனையை வருவித்து கொண்டோம். இதுவரை நாம் செய்த பாவங்கள் எல்லாம் நித்திய தேவனுக்கு எதிராகவும், நம்மை நித்திய தண்டனைக்கும் நடத்துகிறது. "பாவத்தின் சம்பளம் மரணம், தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்துவினால் உண்டான நித்திய ஜீவன் (ரோ. 6:23).

என்றாலும் இயேசு கிறிஸ்து பாவமில்லாதவர் (I பேதுரு 2:22) நித்திய தேவகுமாரன் நம்முடைய பாவத்திற்க்காய் அவர் மரித்தார் நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம் மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். (ரோ. 5:8) இயேசு கிறிஸ்து சிலுவையில் நமக்காய் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து பாவத்தின் மேலும் மரணத்தின் மேலும் வெற்றி சிறந்ததை நிரூபித்தார். (யோ. 19:31-42) (II கொரி. 5:21, I கொரி. 15:1-4, I பேதுரு 1:3).

தேவனை விசுவாசித்து நம்முடைய பாவத்தை விட்டு தேவனுடைய இரட்சிப்புக்கு நேராய் திரும்புவோம் (அப். 3:19). எனக்காக கிறிஸ்து சிலுவை மரத்தில் தொங்கினார் என்று விசுவாசித்து, நம்பி அவரிடம் வரும்போது நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நித்திய வாழ்க்கை பரலோகத்தில் தொடங்கலாம். "தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டு போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்ப கூர்ந்தார். (யோ. 3:16) கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் (ரோ. 10:9) விசுவாசம் மாத்திரம் கிறிஸ்துவின் வேலையை சிலுவையில் முடிக்க செய்தது. நாம் நித்திய வாழ்க்கை அடைய வேண்டும் என்றால் நாமும் விசுவாச பாதையில் நம்முடைய ஓட்டத்தை துவக்க வேண்டும் (எபே.2:8-9) கிருபையினால் விசுவாசத்தை கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இரு தேவனுடைய ஈவு.

இயேசு கிறிஸ்த்துவை உங்கள் வாழ்வின் இரட்சகராய் ஏற்றுக்கொள்வீர்களானால் இதோ ஓர் சிறிய ஜெபம் நினைவு கொள்ளுங்கள் இந்த ஜெபமோ அல்லது வேறு ஜெபமோ உங்களை இரட்சிக்காது இது ஆண்டவருக்கு உன் விசுவாசத்தை காட்டுவதும் உன் வாழ்வில் தேவன் தந்த இரட்சிப்புக்கு நன்றி சொல்வதுமே. "தேவனே உமக்கு விரோதமாய் பாவம் செய்து தண்டனை வருவித்துக்கொண்டேன். ஆனால் என்னுடைய பாவத்திற்கான தண்டனையை கிறிஸ்துவின் மூலம் நீர் ஏற்றுக்கொண்டு எனக்கு மன்னிப்பு நல்கினீரே உமக்கு நன்றி. தேவனே, நான் என் பாவத்தைவிட்டு திரும்பி உம்முடைய இரட்சிப்பை நம்பி இருக்கிறேன். உம்முடைய அதிசயமான கிருபைகளுக்கும், மன்னிப்புக்கும் மற்றும் வெகுமதியாய் கொடுத்த நித்திய வாழ்க்கைக்கும் நன்றி தேவனே ஆமென்.

நீங்கள் இப்பக்கத்தை படித்து இருக்கிறீர்கள், இதனால் இயேசுவிற்காக ஒரு முடிவு எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள "நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்" என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

http://unmaiselvam.blogspot.com/2008/03/blog-post_29.html

Thursday, March 27, 2008

இரட்சிப்பு...இலவசம்

பேர்பெற்ற மிஷனரியாகிய ஆதாம் ஸ்மித் சுவிசேஷப்படை முயற்சிக் கூட்டமொன்றில் பிரசங்கம் செய்துமுடித்தபின் "இப்பொழுது அந்நிய நாடுகளில் நடந்தேறும் மிஷனரி ஊழியத்திற்காக காணிக்கை எடுக்கப்படும்" என்றார்.

முன் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு அம்மாள் எழுந்து நின்று,"ஐயா,இரட்சிப்பு இலவசம் என்று இவ்வளவு நேரமும் பிரசங்கம் கேட்டோம்.அப்படியானால் காணிக்கை எதற்காக எடுக்கவேண்டும்?" என்றாள்.

இருவருக்கும் பின்வருமாறு சம்பாஷணை நடந்தது:-

"அம்மா,நீங்கள் தண்ணீர் கிரையம் கொடுத்து வாங்குகிறீர்களா?"

"இல்லை,இலவசம்"

"இலவசமாக தண்ணீர் உங்கள் வீட்டண்டை வர,இரண்டு மைல் தூரத்தில் பம்பில் ஸ்டேஷன் கட்டி யந்திரங்கள் வைத்து,பூமியில் குழாய்கள் பதித்து,தண்ணீரை உங்கள் வீட்டுக்கு முன் கொண்டு வந்து இலவசமாய்க் கொடுக்கிறார்கள்.எவ்வளவு பணம் செலவாகி இருக்கும்."

"ஐயா நான் புத்தியீனமாய்க் கேட்டுவிட்டேன்.தயவு செய்து மன்னியுங்கள்."

இரட்சிப்பு இலவசம் தான்.அதை அறிவிக்க ஆட்கள் வேண்டாமா? கர்த்தருடைய நாம மகிமைக்கென்றுதான் காணிக்கை.

"என் இரட்சிப்புத் தாமதிப்பதில்லை"
-ஏசாயா:46:13

"கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும் படி நாடுகிறேன்"
-ரோமர்:15:21

இரட்சிப்பு...இலவசம்

பேர்பெற்ற மிஷனரியாகிய ஆதாம் ஸ்மித் சுவிசேஷப்படை முயற்சிக் கூட்டமொன்றில் பிரசங்கம் செய்துமுடித்தபின் "இப்பொழுது அந்நிய நாடுகளில் நடந்தேறும் மிஷனரி ஊழியத்திற்காக காணிக்கை எடுக்கப்படும்" என்றார்.

முன் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு அம்மாள் எழுந்து நின்று,"ஐயா,இரட்சிப்பு இலவசம் என்று இவ்வளவு நேரமும் பிரசங்கம் கேட்டோம்.அப்படியானால் காணிக்கை எதற்காக எடுக்கவேண்டும்?" என்றாள்.

இருவருக்கும் பின்வருமாறு சம்பாஷணை நடந்தது:-

"அம்மா,நீங்கள் தண்ணீர் கிரையம் கொடுத்து வாங்குகிறீர்களா?"

"இல்லை,இலவசம்"

"இலவசமாக தண்ணீர் உங்கள் வீட்டண்டை வர,இரண்டு மைல் தூரத்தில் பம்பில் ஸ்டேஷன் கட்டி யந்திரங்கள் வைத்து,பூமியில் குழாய்கள் பதித்து,தண்ணீரை உங்கள் வீட்டுக்கு முன் கொண்டு வந்து இலவசமாய்க் கொடுக்கிறார்கள்.எவ்வளவு பணம் செலவாகி இருக்கும்."

"ஐயா நான் புத்தியீனமாய்க் கேட்டுவிட்டேன்.தயவு செய்து மன்னியுங்கள்."

இரட்சிப்பு இலவசம் தான்.அதை அறிவிக்க ஆட்கள் வேண்டாமா? கர்த்தருடைய நாம மகிமைக்கென்றுதான் காணிக்கை.

"என் இரட்சிப்புத் தாமதிப்பதில்லை"
-ஏசாயா:46:13

"கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும் படி நாடுகிறேன்"
-ரோமர்:15:21

Tuesday, March 25, 2008

எந்த சிறிய காரியமும்

தத்துவ இயல் வகுப்பு நடத்துவதற்காக அத்துறை பேராசிரியர் சில பொருட்களுடன் வகுப்பறையில் நுழைந்தார்.

மாணவர்கள் முன்பாக தனது பாடத்தை நடத்த ஆரம்பிப்பதற்கு முன்பாக அவர் எதுவும் பேசாமல் தனது கையிலிருந்த கண்ணாடி ஜாடியில் சிறிய பந்துகளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு அந்த ஜாடியை நிரப்ப ஆரம்பித்தார். அந்த ஜாடி நிறைய பந்துகளை போட்டபின் மானவர்களைப் பார்த்து, இந்த ஜாடி நிரம்பிவிட்டதா? என்று கேட்டார். மாணவர்கள் எல்லாரும் ஆம் என்றனர்.

அதன்பின்பு ஆசிரியர் சிறு சரளை கற்களை எடுத்து அந்த ஜாடியில் போட்டு அந்த ஜாடியை சற்றே குலுக்கினார். அப்போது அந்த சிறு கற்கல் பந்துகளுக்கிடையே உள்ள இடைவெளியுள்ள இடங்களில் சென்று இடத்தை நிரப்பியது.
அதன்பின்பு அவர் மீண்டுமாக மாணவர்களைப் பார்த்து, இப்போது இந்த ஜாடி நிரம்பிவிட்டதல்லவா? என்று கேட்டார். அப்போது மாணவர்கள் மொத்தமாக ஆம் என்றனர்.

அப்போது அவர் பொடிமணல் உள்ள ஒரு பையை எடுத்து அதை அந்த ஜாடியில் கொட்டினார்.அந்த மணல் எங்கும் இடைவெளியில்லாதவாறு எல்லா இடங்களையும் அடைத்துக் கொண்டு அந்த ஜாடியை நிரப்பியது. என்றாலும் அவர் மீண்டுமாக மாணவர்களைப் பார்த்து இப்போது இந்த ஜாடி நிரம்பி விட்டதா? என்று கேட்டார். எல்லா மாணவர்களும் ஒட்டுமொத்தமாக கோரசாக ஆம் நிரம்பிவிட்டது என்றன.
அப்போது அந்த ஆசிரியர் தனது மேஜையின் கீழே இருந்து இரண்டு கப் காபியை எடுத்து அந்த ஜாடியில் ஊற்றினார். அப்போது அந்த காபியானது மணலுக்கு இடையே உள்ள சிறு துவாரங்களையும் அடைத்து முழுவதுமாக அந்த ஜாடியை நிரப்பிற்று. இதைக் கண்ட எல்லா மாணவர்களும் கொல்லென்று சிரித்தனர். அந்த சிரிப்பொலியின் மத்தியில் பேச ஆரம்பித்த அந்த ஆசிரியர்,இந்த கண்ணாடி ஜாடி உங்கள் வாழ்க்கையை விளக்கும் ஒரு உதாரணமாய் இருக்கிறது என்பதை நீங்கள் கண்டு கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன் என்று கூறி தனது விளக்கத்தை தொடர்ந்தார்.

அந்த சிறு பந்துகள் - கடவுள்,உங்கள் குடும்பம், குழந்தைகள், உங்கள் தேக சுகம், உங்கள் நண்பர்கள் மற்றும் உங்களுக்கு விருப்பமான உணர்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது - மிகவும் முக்கியமானவை ஆகும். இவை மாத்திரம் உங்களிடம் இருக்குமென்றால் நீங்கள் எந்த நிலையிலிருந்தாலும் வாழமுடியும். வாழ்க்கை நிறைவானதாக இருக்கும்.

சிறு சரளைகற்கள் உங்கள் வாழ்க்கையிலுள்ள மற்ற காரியங்களான உங்கள் வேலை, உங்கள் வீடு மற்றும் உங்கள் கார் போன்ற சொத்துகளை குறிக்கிறது.

பொடிமணலானது உங்கள் வாழ்க்கையிலுள்ள லொட்டு லொசுக்கு காரியங்களான சின்ன சின்ன காரியங்களைக் குறிக்கிறது. ஒருவேளை நீங்கள் முதலிலேயே ஜாடியில் இந்த மணலை போட்டிருப்பீர்களெனில், சிறு பந்துகளையும் சரளை கற்களையும் போட இடம் இருந்திருக்காது.

இந்து போலத்தான் உங்கள் வாழ்க்கையும். நீங்கள் உங்கள் வாழ்வில் சின்ன சின்ன காரியங்களுக்கு உங்கள் நேரத்தையும் சக்தியயும் செலவழித்துக் கொண்டிருப்பீர்களெனில், முக்கியமான காரியங்களுக்கு உங்கள் வாழ்வில் இடமில்லாமல் போய்விடும்.ஆகவே உங்கள் மகிழ்ச்சிக்கு தேவையான முக்கியமான காரியங்களில் கவனம் செலுத்துங்கள். கடவுளோடு நேரம் செலவழியுங்கள், குழந்தைகளோடு விளையாடுங்கள். உங்கள் மனைவி அலது குடும்பத்தாரோடு நேரம் செலவழித்து அவர்களோடு வெளியே செல்லுங்கள். உங்கள் வீட்டை சுத்தப்படுத்தி குப்பைகளை அகற்ற எப்போதுமே நேரம் இருக்கட்டும்.

மிக மிக முக்கியமான காரியம் என்னவெனில் பந்துகளால்(அதாவது முக்கியமானவைகளால்) முதலில் நிரப்ப வேண்டும். எதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அப்போது எல்லாம் எளிதாகிவிடும் என்று கூறி தனது விளக்கத்தை முடித்தார்.

அப்போது ஒரு மாணவன் தனது கையை உயர்த்தி, அப்படியானால் காபி எதைக் குறிக்கிறது? என்று கேட்டார். அப்போது புன்னகைத்த அந்த பேராசிரியர் அந்த மாணவரைப் பார்த்து நீ இந்த கேள்வியை கேட்டதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். வாழ்க்கையில் எவ்வளவுதான் அலுவல்கள் நிறைந்திருந்தாலும் உன் நண்பனோடு அமர்ந்து காபி குடிப்பதற்கும் நேரமும் இடமும் இருக்கிறது என்பதைத்தான் காபி குறிக்கிறது என்றார் அந்த பேராசிரியர்.

Monday, March 24, 2008

கிறிஸ்துவத்தில் ஜாதி - பாரதிதாசன்

சமீபத்தில் 'இயேசு மொழிந்த தெள்ளமுது' என்ற பெயரில் பாரதிதாசன் எழுதிய கவிதை ஒன்றை படிக்க நேர்ந்தது. படித்து முடித்தவுடன் என் நேற்றி பொட்டில் யாரோ அடித்தது போல் இருந்தது. அந்த கவிதையில் -ஜாதி - என்பது கிறிஸ்துவத்தை எவ்வாறு ஆட்டிப்படைக்கிறது என்று அழகாக கூறி இருந்தார்.  அவற்றில் சில வரிகள் என்னை மிகவும் பாதித்து. அவற்றை உங்களுடன் பகிர்து கொள்ளகிறேன். 

மேதினிக்கு சேசுநாதர் எதற்கடி தோழி? - முன்பு
வெம்மைகொள் மக்களைச் செம்மை புரிந்திடத் தோழா- அந்தப்
பாதையில் நின்று பயனடைந்தார் எவர் தோழி? - இந்த
பாரத நாட்டினர் நீங்கிய மற்றவர் தோழா - இவர்
ஏதுக்கு நன்மைகள் ஏற்றவில்லை உரை தோழி - இங்கு
ஏசுவின் கட்டளை நாசம் புரிந்தனர் தோழா...

ஏசு மதத்தினில் இந்துக்கள் ஏனடி தோழி? - அந்த
இந்துக்கள் தீயிட்ட செந்துக்கள் ஆயினர் தோழா - மிக
மோசம் அவர்க்கென்ன வந்தது கூறடி தோழி - அட
முன் - மனு என்பவன் சொன்னதில் வந்தது தோழா - அவன்
நாசம் விளைக்க நவின்றது யாதடி தோழி? - சட்டம்
நால்வருணத்தினில் நாலாயிரம் சாதி தோழா - ஏசின்
ஆசை மதம் புகப் பேதம் அகன்றதோ? தோழி
- அந்தத்
தொண்டர்கள் உள்ளனர், தொண்டு பறந்தது தோழா - அதைப்
போதாக்குறைக்கு முப்போகம் விளைத்தனர் தோழா - அடி
எல்லையில் பேதம் இழைத்தது தான் எவர் தோழி? - அட
இந்த நெடுஞ்சட்டை அந்தகரே அறி தோழா...


 


பஞ்சமர் பார்ப்பனர் என்பதெல்லாம் என்ன தோழி? - இவை
பாரத நாட்டுப் பழிச்சின்னத்தின் பெயர் தோழா
- இங்கு
கொஞ்சமும் இப்பழி கொள்ளுதல் நல்லதோ? தோழி - ஒப்புக்
கொள்ளும் நிலத்தினில் கள்ளி முளைத்திடும் தோழா - இங்கு
நெஞ்சினிற் சேசுவின் தொண்டர் நினைப்பென்ன தோழி? - தினம்
நேர்மையில் கோயில் வியாபாரம் செய்து தோழி - அந்தக்
கோல நற் சேசு குறித்தது தானென்ன தோழா? - ஆஹா
கோயிலென்றால் அன்பு தோய்மனம் என்றனர் தோழா - அந்த
ஆண்டவன் தொண்டர்கள் ஆகிடத் தக்கவர் யாவர் - எனில்
அன்னியர், தான் என்ற பேதமில்லாதவர் தோழா!


 

- பாரதிதாசன்
கிறிஸ்துவத்தில் ஜாதி


சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பு எழுதிய கவிதை நமக்கு இன்றும் பொருந்தும்.  நான் என் ஜாதியில் திருமணம் செய்யவில்லை அல்லது நான் என் திருமணத்தின் போது ஜாதி பார்க்கவில்லை என்பதால் இதை எழுதுவதற்கு முழுதகுதி எனக்கு உண்டு. விரைவில் முழு கவிதையும் தர முயலுகின்றேன்.

ஒருவர் மட்டும்!

மூவரும் விசாரணைக் கைதிகள்!
மனித இனத்திற்கு எதிரான குற்றம்.
இருவர் குற்றவாளிகள்; ஒருவர் நிரபராதி.



 

மூவருக்கும் அரசு விசாரணை!
இருவருக்கு நியாயமான விசாரணை;
ஒருவருக்கு அநியாய‌மான விசாரணை.
 

மூவரும் சிலுவை சும‌ந்த‌ன‌ர்!
இருவ‌ருக்கு அவ‌ர்க‌ளே வ‌ருவித்த‌து.
ஒருவ‌ருக்கு சும‌த்த‌ப் ப‌ட்ட‌து.
 

மூவ‌ருக்கும் இக‌ழ்த‌லும் உமிழ்த‌லும்!
இருவ‌ர் ச‌பித்த‌ன‌ர்;திருப்பி உமிழ்ந்த‌ன‌ர்.
ஒருவ‌ர் ம‌வுன‌மானார்.
 

மூவ‌ரும் சிலுவையில் அறைய‌ப் ப‌ட்ட‌ன‌ர்!
இருவ‌ருக்கு வேண்டிய‌துதான்.
ஒருவ‌ருக்கு வேண்டாத‌து.
 

மூவ‌ருக்கும் வேதனை! கைவிட‌ப்ப‌ட‌த‌ற்காக‌
இருவருக்கு காரணமிருந்தது;
ஒருவ‌ருக்கு கார‌ண‌மேயில்லை.
 

மூவ‌ரும் பேசின‌ர், சிலுவையில் தொங்கிய‌போது!
இருவ‌ர் ஏனென்ற‌ன‌ர்;
ஒருவ‌ர் ம‌ன்னித்தார்.
 

மூவ‌ரும் உண‌ர்ந்த‌ன‌ர், சாகிறோமென்று!
இருவ‌ர் எதிர்த்த‌ன‌ர்;
ஒருவ‌ர் ஏற்றுக் கொண்டார்.
 

ஒருவ‌ர்
இருவ‌ர்
மூவ‌ர்க்கும் சிலுவையில் ம‌ர‌ண‌ம்.

மூன்று நாட்க‌ள் போயின‌.
இருவ‌ர் க‌ல்ல‌றையிலே புதைந்த‌ன‌ர்.
ஒருவ‌ர் க‌ல்ல‌றையிலிருந்தும் எழுந்தார்!!
 

எழுத்தாக்க‌ம்: ஆன்டோனிட்டோ
 

ஈஸ்டர் சொல்லும் செய்தி என்ன?

     நான் மிகவும் கொண்டாட விரும்புகிற ஒரு காரியம், ஆதிச் சபை அதிகமாய் பிரசங்கித்த ஒரு காரியம் திருச்சபை வரலாற்றில் ஆரம்ப அத்தியாயத்திற்கான அஸ்திபாரம் என்று உயிர்த்தெழுதலைக் குறித்து சொல்லிக் கொண்டே போகலாம். உயிர்த்தெழுதலின் செய்தி என்ன? அது வெறும் கொண்டாட்டமா? அல்லது வெறும் வரலாற்று நிகழ்ச்சிதானா? அல்லது கட்டுக் கதையா? நாம் இதிலிருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய செய்தி என்ன?


ஆண்டவராகிய இயேசு ஒரு மனிதனாக மனுக்குலத்தில் இரட்சிப்புக்காக இந்த உலகில் வந்தார். மீட்பின் திட்டத்தை நிறைவேற்ற அவர் கல்வாரி சிலுவையில் மரித்தார். மேலும் பல தீர்க்கதரிசனங்களின் படியே தாம் சொன்னபடியே அவர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். கல்லறை காவல் பண்ணப்பட்டிருந்தாலும் அவர் உயிர்த்தெழும் போது எதுவும் அந்த நிகழ்வை தடை செய்ய முடிய வில்லை. தேவனே அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார். உயிர்த்தெழுந்த இயேசு தம் சீடர்களுக்கு காட்சியளித்து நாற்பது நாளள்வும் அவர்களுடன் இருந்து பல காரியங்களை போதித்தார். பின்பு பிதாவின் வாக்குதத்தமாகிய பரிசுத்த ஆவியை பெற்ற 120 சீடர்கள் அதன்பின்பு செய்த ஒவ்வொரு பிரசங்கத்திலும் அவர்களின் ஒவ்வொரு பகுதியிலும் உயிர்த்தெழுதல் ஆக்ரமித்திருந்தது. அது அவர்களின் பேச்சாக மட்டுமலாது உயிர் மூச்சாகவே இருந்தது. தைரியமாக எவர் முன்பாகவும் அவர்கள் ஆண்டவரின் உயிர்த்தெழுதலைக் குறித்து சாட்சியிட்டனர். இதை நாம் அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் வாசிக்கலாம். மேலும் அதுவரைக்கும் ஆறாம் நாளாகிய சனிக்கிழமையன்று ஓய்வு நாளாக ஆசரித்து வந்த அக்கூட்டம் கிறிஸ்த்வர்கள் ஆண்டவர் உயிர்த்தெழுந்த தினத்தை முக்கியப்படுத்து ஞாயிற்று கிழமையை பரிசுத்தமான நாளாக்கி கர்த்தரின் சந்நிதியில் கூடினர். இன்று கிட்ட தட்ட உலகமெங்கிலும் ஞாயிற்று கிழமை ஹாலி டே(holiday) ஆகவும் கிறிஸ்தவர்களுக்கு ஹோலி டே(holy day) ஆகவும் இருக்கிறது.தேவனுக்கே மகிமை.

ஈஸ்டர் வரலாறு
ஈஸ்டர் என்ற பதம் இஸ்டார் என்ற இனப்பெருக்கத்திற்கான தேவதையின் பெயரிலிருந்து வந்தது என்பது சற்று ஆச்சரியத்தை நமக்கு தரக் கூடும். நீங்கள் ஈஸ்டர் முட்டை குறித்த விளம்பரங்கள் மற்றும் செய்திகளை பார்த்திருக்கிறீர்களா?. இதற்குக் காரணம் இதுவே. இந்த இஸ்டார் தேவதைக்காக வசந்த கால முடிவில் இன்றைய ஐரோப்பாவில் முற்காலத்தில் ஒரு பண்டிகை கொண்டாடப்பட்டது. நாம் ஈஸ்டர் அனுசரிக்கும் காலமும் ஐரோப்பிய வசந்த காலத்தின் முடிவிலேதான் வருகிறது.

ஆதி அப்போஸ்தலர்களுக்கு சுவிஷேசத்தை சொல்வதற்கே நேரம் போதாமலிருந்தது. அவர்கள் மற்ற காரியங்களில் சிக்கிக் கொள்ள விரும்ப வில்லை(அப்.6:4). மேலும் அவர்கள் நாற்பது நாட்கள் உபவாச நாட்களாகவும் ஆசரிக்க வில்லை. இவையெல்லாம் பின் நாட்களில் தான் சபையால் ஆசரிக்கப்பட்டன. என்றாலும் ஆதி திருச்சபை ஆண்டவர் உயிர்த்தெழுந்த தினத்திற்கு முன்பாக மூன்று நாட்களும் முழு உபவாசமிருந்து வந்தனர் என்பதற்கான செய்திகள் வரலாற்றில் நமக்கு கிடைக்கிறது.

உயிர்த்தெழுதலால் என்ன பயன்?
உயிர்த்தெழுதல் என்பது ஒரு மத நம்பிக்கையாக அல்லாமல் அது வரலாற்று நிகழ்ச்சி என்பது சந்தேகமற விளங்குவதால் கிறிஸ்தவ விசுவாசமானது கண்ணுக்கு தெரியாத கட்டுக் கதையின் மீதல்ல, எல்லாரும் நன்கறிந்த ஒரு வரலாற்று நிகழ்ச்சியின் மீதே அமைந்துள்ளது என்று நாம் காலரை தூக்கி சொல்லிக் கொள்கிற சம்ப்வமாக இருக்கிறது. இயேசு உயிர்த்தெழுந்ததை எவரும் அந்த காலத்தில் மட்டுமல்ல எந்த காலத்திலும் மறுத்து கூற முடிய வில்லை. மறுத்துக் கூற முடியாது. எருசலேமில் இன்றும் இருக்கிற கல்லறை அவ்வாறு கேட்பவர்களுக்கு பதில் கூறுகிறது. கிறிஸ்தவனின் வாழ்க்கையில் உயிர்த்தெழுதல் ஆண்டவரின் உயிர்த்தெழுதல் நமக்கு விசுவாசத்தை தருகிறதாக இருக்கிறது. கிறிஸ்து உயிர்த்தெழா விட்டால் உங்கள் விசுவாசம் வீண் என்று பவுல் சொல்லுகிறார். உயிர்த்தெழுதல் என்பது கிறிஸ்துவின் அனுபவம் மட்டுமல்ல. ஒவ்வொரு கிறிஸ்த்வனின் அனுபவமும் கூட. நான் மரித்தோரின் உயிர்த்தெழுதலைக் குறித்து இங்கு கூற வில்லை. நாம் ஞானஸ்னானம் பெறுகிற போது நடை பெறுகிற காரியத்தைக் கூறுகிறேன். நாம் தண்ணீறில் மூழ்கும் போது அவரின் மரணத்திற்கு உள்ளானவர்களாகி நாம் எழுந்திருக்கும் போது அவரின் உயிர்த்தெழுதலின் சாயலாக் எழுன்கிறோம். நாம் பாவங்களுக்கு மரித்து நீதிக்கு பிழைக்கிறோம். நம்முடைய பழைய மனிதனை சாகடித்து கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய மனிதனாக் மாறுகிறோம். ஞானஸ்னானத்தின் சத்தியம் மிகவும் பிரமாண்டமானதாகும். நீங்கள் இன்னமும் குழந்த ஞானஸ்னானத்தையே விசுவாசித்துக் கொண்டிருக்கிறீர்களா. அது சரியான அனுபவம் என்று இல்லையென்று நானல்ல வேதம் கூறுகிறது விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெறுகிறவன் இரட்சிக்கப்படுவான். சரி விசயத்துக்கு வருவோம். நீங்கள் உங்கலின் வாழ்க்கையில் உயிர்த்தெழுதலின் அனுபவத்தை பெற்றிருக்கிறீர்களா?

அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு கூறுகிறார்:
இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்.அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன். நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றிலும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன். சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி,கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.(பிலி.3:10- 15)

நீங்கள் தேறின சிந்தை உள்ளவர்களாக இருக்கிறீர்களா?

இன்று நம்மை நாமே நிதானித்து பர்ப்போம். நீங்கள் பவுல் அப்போஸ்தலனைப் போல கிறிஸ்துவுக்காக காரியங்களை விட்டி விட தயாராக இருக்கிறீர்களா? தைரியமுள்ளவர்களாக இருக்கிறீர்களா? ஒரு வேளை உங்கள் குடும்பம் அல்லது சபை பாரம்பரியம் (பெந்தேகோஸ்தே சபையிலும் கூட இது உண்டு), அலது உங்கள் பழக்க வழக்கங்கள் அல்லது நீங்கள் மிகவும் நேசிக்கிற காரியங்கள் இவற்றில் ஏதெனும் நீங்கள் கிறிஸ்துவுக்காக விட வேண்டியிருக்கிறதா? இவை உங்களின் பரம அழைப்பின் பந்தய பொருளுக்கு தடையாக இருப்பதாக நீங்கள் உணர்கிறீர்களா? உங்களின் பரம அழைப்பை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? கிறிஸ்துவை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? னாம் ஆண்டவரின் உயிர்த்தெழுதலின் வல்லமையை அறிந்து கொள்ள அவர்தாமே நமக்கு அருள் செய்வாராக. ஆமென்.


இயேசுகிறிஸ்துவைக்குறித்துத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப் பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர், மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.